siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 15 மே, 2013

வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு


கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டில் சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கருதப்படும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 1,585 வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றில் 15 வங்கிகளில் பரிவர்த்தனைகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ. 20 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. ஆறு பரிவர்த்தனைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10 ஆயிரம் கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கி விதிமுறைகளின் ரகசியத் தன்மையினால் உலகின் பல பாகங்களிலிருந்தும் இங்கு கருப்பு பணம் பதுக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதம், போதை மருந்து போன்ற செயல்களுக்கும் சுவிஸ் வங்கிகள் மூலம் பணம் சுழற்சி செய்யப்படுகிறது.
கருப்பு பண சொர்க்கம் என்று தங்கள் நாடு அழைக்கப்படும் களங்கத்தைப் போக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மேலும் வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி வருகிறது
 

0 comments:

கருத்துரையிடுக