siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 15 மே, 2013

பாகிஸ்தான் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்


இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் கோட் லாக்பாத் சிறையில் 1400 கைதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறை அதிகாரிகளின் விரோத மனப்பான்மையைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 3.30 மணிக்கு தங்களை எழுப்பி சிறைக்குள் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்புவதாகவும், சிறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் போராடும் கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.
சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதையடுத்து, சிறையில் உள்ள கொடிய குற்றவாளிகள் மற்ற கைதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இந்திய கைதிகள் 30 பேர் உள்ளனர். அவர்களில் யாராவது உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளாரா? என்பது தகவல் வெளியாகவில்லை.
 

0 comments:

கருத்துரையிடுக