siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 11 ஜூலை, 2013

பெண் கல்லால் அடித்து கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்


பாகிஸ்தானில் செல்போன் வைத்திருந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தேரா காஜி கான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்த தகவல் தெரியவந்ததும், அந்த ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
பின்னர் பஞ்சாயத்து உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தியதற்காக 2 குழந்தைகளுக்கு தாயான அப்பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுமாறு பஞ்சாயத்தார்கள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அப்பெண்ணை அவரது மாமா மற்றும் உறவினர்களே கல்லால் அடித்துக் கொன்றனர்.
இத்தகவலை கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தை சேர்ந்த 3 பேர்களுக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக