siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 13 ஜூலை, 2013

அந்தரங்க உறுப்புகளை சோதனையிட தடை


குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் உள்ள கைதிகளின் அந்தரங்க உறுப்புகளை சோதனையிட வாஷிங்டன் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது வழக்கறிஞர்களை சந்தித்த பின்னரும், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரும் மிக கேவலமான சோதனைக்கு உள்ளாவதாக புகார் எழுந்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர்களது அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் சோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான சோதனைகள் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பழைய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தாங்கள் மிக மோசமான சோதனைகளுக்கு ஆளாவதை கண்டித்து கைதிகள் பலரும் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக