siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 15 ஜூலை, 2013

போலந்து ஜனாதிபதி மீது முட்டை வீச்சு


1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் நடந்த படுகொலை ஒன்றில், உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் குழுவைச சேர்ந்த போலந்து நாட்டவர்கள் பெருமளவில் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சென்ற வாரம் போலந்து நாட்டின் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் உக்ரைன் படுகொலையில் இறந்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்படும் போது இனப்படுகொலை என்ற முத்திரையுடன் இனத்தை சுத்திகரிப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உக்ரைனில் வசித்துவந்த போலந்து மக்களை கோபப்படுத்தியது.
நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று, போலந்தின் ஜனாதிபதி ப்ரோனிஸ்லாவ் கொமொரொவ்ஸ்கி உக்ரைனின் வடக்கில் உள்ள வயோலின் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கிருந்த போர் நினைவிடத்தைப் பார்வையிட்ட அவர், கத்தோலிக்க ஆலயத்தின் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவரின் தோளை அருகில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் தட்டினார். திரும்பிப் பார்த்த அவர் முகத்தில் தன் கையிலிருந்த அவரது முகத்தில் முட்டையை வீசினார்..
உக்ரைனின் தெற்குப் பகுதியான சப்போரிஷியாவைச் சேர்ந்த 21 வயதுடைய அவரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக