siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 4 நவம்பர், 2013

ரேபிஸ் நோய்த் தொற்று: 10 பேர் மருத்துவமனையில்


 
பிரான்சில் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு மாத பூனைக்குட்டி ஒன்று பாரிசுக்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இருந்து தத்தெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து இந்த பூனைக்குட்டி உயிரிழந்தது விட்டது, அப்போது தான் பூனைக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த பூனையுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 பேருக்கு தற்காப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இவர்கள் பூனையில் அருகில் இருந்ததால், நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற உயிரினங்களுக்கு நோய் பரவியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த 1998ம் ஆண்டு நரி ஒன்றுக்கும், 2008ம் ஆண்டு நாய் ஒன்றுக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக