siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 26 நவம்பர், 2013

கனடாவில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கனடாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் சீர்திருத்த ஆராய்ச்சியாளர் Howard Sapers சமர்பித்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 12,000 என்ற எண்ணிக்கையில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 15,000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி பூர்விக குடிமக்களின் தொகை 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது, கருப்பினத்தை சேர்ந்த மக்களும் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் கடுங்காவல் தண்டனைக்குட்பட்டவர்கள், பிணையில் கூட வெளிவர தகுதி இல்லாதவர்கள்.

2,700 புதிய சிறைச்சாலை அறைகள் கட்டப்பட்டும், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
கணக்கெடுப்பின்படி கனடா அரசாங்கம் ஆண்டுக்கு ஆண் கைதி ஒருவருக்கு 1,10,000 டொலர்களும், பெண் கைதிக்கு 2,20,000 டொலர்களும் செலவழிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 comments:

கருத்துரையிடுக