siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 27 நவம்பர், 2013

56 தாய்மார்கள் படுகொலை! பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதன்படி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சில் 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், கற்பழிப்பு வழக்கில் 344 வழக்குகளும் மற்ற வன்முறை சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக