siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரதமருக்கு எதிரான வன்முறையில் போலீஸ்காரர் பலி - 48 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் போலீஸ்காரர் இறந்தார். மேலும் 48 பேர் காயம் அடைந்தனர்.
பிரதமருக்கு எதிராக போராட்டம் - தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலக வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி போராட்டம் நடந்து வருகிறது.
   
அதை ஏற்க மறுத்த பிரதமர் பிப்ரவரி 2–ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இத்தேர்தலை புறக்கணிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அறிவித்தது. ஆனாலும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சியும், வேறு சில கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் தீவிரம் : இதனால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களும் கடந்த சில நாட்களாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 27 கட்சி பிரதிநிதிகள் கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய இருந்தார்கள். இதனால்

விளையாட்டு அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விளையாட்டு அரங்குக்கு காலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பூட்டிக்கிடந்த ‘கேட்’டை உடைத்து அரங்கத்துக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் இவர்களை தடுக்க முயன்றனர்.

மோதல் கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீச்சு:
இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 48 ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் நரோவ் பித்சித் (45) பரிதாபமாக செத்தார். தற்போது மீண்டும் போராட்டம், மோதல் தீவிரம் அடைந்துள்ளதால் வன்முறைவெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

0 comments:

கருத்துரையிடுக