அமெரிக்காவிற்கு விடுமுறை காலத்தில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள கனடாவில் எல்லை பகுதி சேவை நிறுவனம் 5 டிப்ஸ்களை அளிக்கின்றது. இவ்விடுமுறை காலத்தில் எல்லையை கடப்போர் கவனிக்க வேண்டிய 5 குறிப்புகள்: 1. தங்களின் பிரயாண பத்திரங்களை தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும். 2. தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும். 3. வண்டியில் கொண்டு செல்லப்படும் பொருட்களை பற்றிய தகவல்கள் அறிந்திருக்க வேண்டும். 4. கைபேசி மர்றும் வானொலி போன்ற மின்னணு பொருட்களை சோதனை ஆய்வு சாவடி அருகில் நெருங்கும் போது அணைத்து வைத்தல் அவசியம். 5. கைவசம் உள்ள பணத்தை தெரிவிக்க வேண்டும் (அதாவது கனடாவில் நுழையும் போது 10,000 கனடியன் டொலர்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது). இதனையடுத்து அடையாள அட்டைகள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்கள், வாங்கிய பொருட்களுக்கான ரசீதுகள், பாஸ்போர்ட் மர்றும் விசா பத்திரங்கள் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்கலையும் பத்திரமாக வைத்திருப்பது மிக அவசியம். மேலும்(Duty free shop) விமான நிலையத்தில் இருக்கும் கஸ்டம்ஸ் வரிகள் இல்லாத கடைகளில் பொருட்களை வாங்கினாலும், சுங்க அதிகாரிகளின் சோதனையின் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். |
சனி, 21 டிசம்பர், 2013
எல்லையை கடக்கும் கனடா மக்களுக்கு 5 டிப்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக