siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 23 டிசம்பர், 2013

மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது தாக்குதல்

தெற்கு சூடானில் மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானில் ஜனாதிபதி சல்வா கீரின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், அங்குள்ள புரட்சி படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக இராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே நடந்து வந்த மோதல்கள் தீவிரமடைந்து உள்நாட்டு போராக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் ஐ.நா அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் கடந்த 18ம் திகதி தாக்குதல் நடத்தினர்.
இதில் சூடான் இராணுவத்தை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பலியாகினர்.
எண்ணை வளம் மிக்க ஜொங்கோலி மாகாணத்தில் உள்ள போர் என்ற நகரம் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே அங்கு இராணுவத்துக்கும், புரட்சிப் படைக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது.
எனவே, தெற்கு சூடானில் வாழும் தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து செல்ல அமெரிக்கா ஏற்பாடு செய்தது. இதற்காக 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்கள் தெற்கு சூடானுக்கு விரைந்தன.

புரட்சிப் படையினரின் பிடியில் உள்ள போர் நகரத்தில் அவை தரையிறங்க முயன்ற போது, அமெரிக்க போர் விமானங்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், குண்டுகளை வீசியும் புரட்சிப் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆயுத பலத்தை பயன்படுத்தி தெற்கு சூடானின் ஆட்சியை கைப்பற்ற

நினைப்பவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவும், சர்வதேச சமுதாயமும் அளித்து வரும் நீண்டகால ஆதரவை இழக்கும் நிலைக்கு தெற்கு சூடானை தள்ளிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக