siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடன் பெற்றுக் கொள்வது தொடர்பான கெடுபிடிகளில் தளர்வு


கியூபாவில் கடன் பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த கெடுபிடிகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் இலகு அடிப்படையில் கடன் பெற்றக்கெர்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகள் மற்றும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை கொள்வனவு செய்வது தொடர்பிலான சட்டத்திலும் கியூப அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கியூபாவின் மொத்த ஊழியப்படையில் பத்து வீதமானவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக