siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இந்தியருக்கு சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த நிதின் ரானா என்பவர் வாடகை கார் சாரதியாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி நள்ளிரவில் ரயில் நிலையம் அருகே 17 வயதுள்ள பாடசாலை மாணவி மதுபோதை மயக்கத்தில் நின்றார்.

இந்த மாணவி தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த போதை மயக்கத்தில் தள்ளாடிய மாணவியை வழிப்போக்கர்கள் சிலர் நிதின் ரானாவின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.

குறித்த கார் சாரதி, தனை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மறுநாள் அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதன்பேரில் நிதின் ரானா மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வின்டே வில்மாத், இந்திய சாரதிகள் 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 4 ஆண்டு பிணையில் வெளியே விடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
 

0 comments:

கருத்துரையிடுக