siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஜனவரி, 2014

ஹெலிகொப்டர் விபத்து! - ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர்


கொலம்பியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவில் தனியார் ஹெலிகொப்டர் ஒன்று ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகொப்டர் நாட்டின் வடமேற்கு பகுதியில் பொகடாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த போது அனோரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 5 பேரும் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ராணுவ மதகுரு மற்றும் விமானியும் பலியானார் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஹெலிகொப்டர் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரியவரவில்லை.

0 comments:

கருத்துரையிடுக