siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 மார்ச், 2014

அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் நேற்று மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரி அவர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமானம் தரையிறங்கும் இடத்தின் அருகே தயார்நிலையில் வைக்கப்பட்டன. அதன் பின்னர் விமானம் பத்திரமாக 2.20 மணிக்கு அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிய பின்னர் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன.
 

0 comments:

கருத்துரையிடுக