siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 மார்ச், 2014

கேபிளில் தீப்பிடித்ததே நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கு

ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு மின்சார கேபிள்களில் தீப்பிடித்ததே காரணம் என்று கப்பற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பற்படை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் 26-ம் தேதி சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பேட்டரி பகுதியில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், பேட்டரி பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பேட்டரி பகுதிக்கு மேல் உள்ள மின் கேபிள்களில் தீ பிடித்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 2 கப்பற்படை அதிகாரிகள் உயிரிழந்ததும், விபத்துக்குப் பொறுப்பேற்று கப்பற்படைத் தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி, தனது பதவியை ராஜிநாமா செய்ததும் நினைவுகூரத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக