siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 11 மார்ச், 2014

புகலிட கோரிக்கையாளர்:சித்திரவதைக்கு உள்ளான நேர்காணல் செய்ய மறுத்த


கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு உள்நாட்டு பொலிஸாரினால் பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளான இலங்கைப் புகலிட கோரிக்கையாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக கேபிள் தகவல் ஒன்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கன்பராவில் இருந்து கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இந்த கேபிள் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் விசாரணைகளில் குறுக்கீடு செய்தவதை தவிர்ப்பதற்காக சித்தரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் நபரிடம் நேர்காணலை நடத்தவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நலன்களுக்காக இலங்கையின் விசாரணைகளில் இருந்து தூர விலகி நிற்க வேண்டும். இதனால் நாம் அவரை சந்திக்கும் வாய்ப்பை விரும்பவில்லை.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் சிங்களவர்.

இலங்கையின் தடுப்பு காவலில் இருக்கும் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் புகலிட கோரிக்கையாளர்களின் வழக்குகள் ஆதாரமற்றது என இறுதியில் எழுப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளன நபர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக எவ்வாறு கண்டறியப்பட்டது என்பது தெளிவாகவில்லை என்றும் கொழும்பு ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக