siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 மார்ச், 2014

குழந்தைகளை உலுக்கிய குளோரின்

கனடாவில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கலக்கப்பட்ட குளோரினை சுவாசித்ததில் 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான குழந்தைகள் அப்பகுதியின் Carling Ave என்ற ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
ஹோட்டலின் நீச்சல்குளத்தில் அதிகளவில் குளோரின் இராசயனம் கலந்திருந்தது, இதனை சுவாசித்ததில் 54 பேர் பாதிப்படைந்தனர்.
இவர்களை காப்பாற்றும் பணியில் பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், துர்நாற்றமிக்க இரசாயனமான குளோரினை மிகுதியாக சுவாசித்ததால் வாந்தி மற்றும் சுவாசிமின்மையில் குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும், மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
                  

0 comments:

கருத்துரையிடுக