siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூன், 2014

விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தும்

 
பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எமிரேட்ஸ், எத்திஹாட் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமும் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீதான தாக்குதலை அடுத்து, விமானச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணியொருவர் பலியாகியிருந்தார். இதன் எதிரொலியாக பாகிஸ்தானிய பொலிசார் பலரைக் கைது செய்திருந்தார்கள். எனினும், துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் இடத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள்.
 

0 comments:

கருத்துரையிடுக