siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 25 ஜூலை, 2014

படுக்கை அறையில் நுழைந்த மர்ம நபர்: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் நபர் ஒருவர் பெண்ணின் படுக்கையின் கீழ் ஒளிந்து கொண்டு குறுச்செய்தி அனுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த அப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
பிரித்தானியாவில் செஸ்டர் நகரில் ரேவன்ஸ்கார்ப்ட் (18) என்ற மர்ம நபர் ஒருவன் பெண்னின் படுக்கை அறையில் நுழைந்துள்ளார்.
இதன்பின் அவரின் படுக்கையின் கீழே மறைந்து கொண்டு, நான் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறேன் என குறுச்செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் தான் காலையில் ஜன்னல் அருகில் தூக்கு போடு கொள்ள போவதாக அப்பெண்ணிடம், மற்றொரு குறுச்செய்தியை பகிர்ந்து கொண்டு திகிலூட்டியுள்ளார்.
இதனால் பயமடைந்த அப்பெண் தனது தாயின் அறைக்கு சென்று அன்று இரவு உறங்கியுள்ளார்.
இந்நிலையில் காலையில் அந்த பெண் தனது அறைக்கு வந்த போது தனது படுக்கையின் கீழ் இந்த நபர் தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இத்தகவலை அவர் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, அங்கு வந்த பெண்ணின் தாயார் அந்நபரை வெளுத்து வாங்கி விரட்டி அடித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த மர்ம நபருக்கு 12 வாரம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக