siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 7 ஜூலை, 2014

உளவு சொல்லும் ஜேர்மன் ஊழியர்கள்?

ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர் அமெரிக்காவிற்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளார்.
பாராளுமன்ற விவகாரத்தில், ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர், அமெரிக்கவின் வாஷிங்டன் அரசுக்கு உளவு சொல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கைதுசெய்ய பட்ட அந்த 31 வயது ஊழியர், பெயர் குறிப்பிடாத மையத்திற்கு, வெளிநாட்டு புலனாய்வு சேவை செய்து வருவதாக அரசு தரப்பில் குறிப்பிடபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் அந்த நபர் அமெரிக்க புலனாய்வு சேவை மையத்திற்கு தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா புலனாய்வு சேவை மையம், ஜேர்மனிய ஊழியர்களை குறி வைத்து உளவு சொல்வதற்கு ஆட்களை சேகரிப்பதாக வெளியான செய்திகள
அடுத்து இந்த நபர் கைது செய்யபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது போன்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம் என மற்ற ஊழியர்களை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மற்றைய செய்திகள்
 
 



 
                     

0 comments:

கருத்துரையிடுக