siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 9 ஜூலை, 2014

பிரதேசப் பொலிசார் விடுத்துள்ள வழிப்புணா்வு எச்சரிக்கை!

ரொறன்ரோவில் - Durham என அழைக்கப்படும் பிரதேசத்தில் பல வீட்டுரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகதத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவர்கள் ஹைட்டோவிற்கு கிட்டத்தட்ட 1000 டொலர்கள் வரையில் செலுத்தவேண்டியிருக்கின்றது எனவும் அதற்கான பணத்தை அனுப்பாவிடின் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது என அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் வீட்டடைமையாளர்கள் மட்டுமல்ல தொழில் உரிமையாளர்களுக்கும் இவ்வாறான பயமுறுத்தல்கள் தொலைபேசி மூலகமாகக் கிடைத்திருக்கின்றன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்
Durham பிரதேசப் பொலிசார் இவ்வாறன பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்கள் பொதுமக்களின் credit card or prepaid credit card போன்றவற்றைப் பாவித்து உடனடியாக குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தும்படியும் அவ்வாறு அவர்கள் செய்யாவிடின் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பம் எனப் பயமுறத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
குறிப்பிட்ட இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வகையில் தமது தொலைபேசியில் answering machine and toll-free number போன்ற நடைமுறைகளை அமைத்திருக்கின்றார்கள் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறான பயமுறுத்தும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால் பணத்தினைச் செலுத்துவதற்கு நடவடிக்கை செய்வதற்கு முன்பாக கடந்த மாதத்தின் கட்டனசீட்டினைப் பரிசீலனை செய்யும்படி மக்கள் கேட்கப்படுகின்றார்கள். அத்துடன் 1-888-579 FREE யுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கும்படியும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக