siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

திடீரெனச் உலகளாவிய ரீதியில் செயலிழந்த சமூக ஊடகங்கள்..

உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெஸன்ஜர் ஆகியன செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த செயலணிகள், செயலிழந்துள்ளதாக பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 52 வீதமான பயன்பாட்டாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரம நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த செயலணிகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நிலாவரை.கொம்...

வியாழன், 5 நவம்பர், 2020

நடந்த திடீர்த் திருப்பம்..ஒட்டுமொத்தமாக கலைந்து போனஅதிபர் ட்ரம்ப் கனவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை வகித்த சில மாகாணங்களில் கடைசி கட்டத்தில் பிடன் அதிரடியாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்ப் கடும் விரக்தியில் இருக்கிறார்.இந்த தேர்தலில் தொடக்கத்தில் டிரம்ப் முன்னிலை வகிப்பது போல இருந்தது. குடியரசு கட்சிக்கு ஆதரவான மாகாணங்களில் வென்ற டிரம்ப்.. ஜனநாயக கட்சிக்கு ஆதரவான தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்தார்.அதிலும் டெக்சாஸ் மாகாணத்தில் 38, புளோரிடாவில் 29 இடங்களை மொத்தமாக டிரம்ப்...

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாதாம்

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர். திரு.சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

திங்கள், 5 அக்டோபர், 2020

விண்வெளிக்குச் செல்லும் 169 கோடி ரூபா மதிப்பில் அதிநவீன கழிவறை

உலக நாடுகள்.பெரும் வியப்பில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது.தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்த கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால் பயன்படுத்தப்படலாம்.பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகள் அனுப்பப்படும் பொழுது 23 மில்லியன் டாலர் (சுமார் 169 கோடி இந்திய ரூபா)...

புதன், 12 ஆகஸ்ட், 2020

நியூசிலாந்தில் முற்றாக கட்டுப்படுத்திய தேசத்தில் மீண்டும் கொரோனா

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக...

திங்கள், 4 மே, 2020

மிகக் குறைந்த மரணங்களின் எண்ணிக்கையை எட்டிய பிரித்தானியா

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளதாக mirror.co.uk. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலந்தில் 204 பேரும், வேல்ஸில் 14 பேரும், வட அயர்லாந்தில் 6 பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,675 ஆக உயர்ந்துள்ளது .இதேவேளை இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணித்த 54 பேரில், 40 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 -79 வயதுக்கு உட்பட்ட 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும்...

வைத்தியசாலையால் திருப்பி அனுப்பபடவர் வீட்டில் மகனின் சிறப்பான செயற்பாட்டினால் எழுந்து நடந்தார்

வட்பேட்(Watford -UK) நகரில் வாழ்ந்து வந்த சூரிக்கு 81 வயது ஆகிறது. அவர் தனது மனைவி காஞ்சனாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரையும் கொரோனா தாக்கியது. இதனால் அவர் பாதிக்கப்பட்டு, வட்பேட்டில் உள்ள வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை சில நாட்கள் மட்டுமே பராமரித்த மருத்துவர்கள்.கடந்த 26-04-20ம் திகதி அவரது மகன் ராஜ்ஜை அழைத்து, உங்கள் தந்தைக்கு வெண்டிலேட்டர் பொருத்த முடியாது. அவரது நுரையீரல் தாங்காது. எனவே அவரை வீட்டுக்கு  அழைத்து...

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத குட்டியை கவ்வியபடி மருத்துவமனைக்கு வந்த பூனை

உலகில் தாய்ப்பாசத்துக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை, இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை துருக்கியைச் சேர்ந்த பூனை ஒன்று  நிகழ்த்திக் காட்டியுள்ளது. துருக்கியில், தாய்ப்பூனை ஒன்று தனது குட்டிப் பூனைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் தவியாய் தவித்துள்ளது. இதனால், மனிதர்களைப் போலவே அந்த தாய்ப்பூனை தனது  குழந்தை பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளது. துருக்கியின்...

புதன், 8 ஏப்ரல், 2020

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய  மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை  விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த  வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும்...

ஞாயிறு, 1 மார்ச், 2020

நுரையீரலை ஆய்வு செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனப் பிரஜை ஒருவரின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் குறித்த சீன பிரஜையை ஸ்கான் செய்தவேளை அவருக்கு கொரோனா  தாக்கம் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.ஆனால், அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையீரலில் சில மாற்றங்கள் தெரிந்தன .அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரலை ஸ்கான் மூலம் ஆராய்ச்சி...

புதன், 8 ஜனவரி, 2020

பின்லாந் நாட்டு மக்களுக்கு அடித்தது அதிஷ்டம். நான்கு நாட்கள் மட்டும் வேலை

பின்லாந்தின் பிரதமர் இனி தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்.இளம் வயதிலேயே பின்லாந்தின் பிரதமராகியுள்ள Sanna Marin (34), தன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் அதிக நேரம்  மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.அத்துடன், நாளொன்றிற்கு பணியாளர்கள் ஆறு மணி நேரம் வேலை செய்தால் போதும். இப்படி செய்தால் ஒருவேளை  உற்பத்தி பாதிக்கும் என நீங்கள் நினைக்கலாம்....