siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 6 ஜூன், 2016

விஞ்ஞானிகள் பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சி!

மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி சிமேரா என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர் அவ்விஞ்ஞானிகள
உலகெங்கிலும் மாற்று உறுப்பு சிகிச்சைக்கு உறுப்புகள்
 போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் இந்த முயற்சி நடக்கிறது.
கலிபோர்னியா பல்கலக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்த கருக்கள் பொதுவாக சாதாரண பன்றிக் கருக்களைப் போலத்தான் இருக்கும் ஆனால் அவற்றின் உறுப்புகளில் ஒன்று மனித செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறது.
ஆனால் இந்த மனித-பன்றி சிமேராக்களால் ஆனா கருக்கள், 28 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்பட்டு பின்னர் அந்த கரு கலைக்கப்பட்டு, திசுக்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த தொழில்நுட்பம் சர்ச்சைக்குரிய ஒன்று, ஏனெனில், இந்த மனித செல்கள் பன்றியின் மூளைக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் விளையும் அற ஒழுக்கம் சார்ந்த தாக்கங்கள் குறித்தும் கவலைகள்
 நிலவுகின்றன
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 3 ஜூன், 2016

இங்கிலாந்து: ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் ஈழத்தமிழரும் வாக்களிக்கலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பான சர்வசன வாக்கெடுப்பை இங்கிலாந்து தேசம் இந்த மாதம் 23ம் திகதி 
நடத்தவுள்ளது.
ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் தாராளமாக இங்கிலாந்திற்கு வருவதும், சமூகநலக் கொடுப்பனவுகள், பிள்ளைப் பராமரிப்பு நிதியுதவி என்பவற்றை தமது நாடுகளிற்கு அனுப்புவது ஒரு எதிர்ப்பை இங்கிலாந்தில்
 கிளப்பியுள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பாவிற்கு வந்த 1.4 மில்லியன் அகதிகளில் சிரியர்கள், ஈராக்கியர்கள், ஆப்கானியர்களே 75 வீதமானவர்கள் என இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 31 மே, 2016

மீனுக்கு :அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்கள்

பிரித்தானிய நாட்டில் தங்க நிற மீன் ஒன்றின் கழுத்தில் கட்டி இருந்ததை தொடர்ந்து அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள Buckinghamshire நகரில் ரோய் ஹேண்ட்ஸ்(59) என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் தங்க நிறத்தில் 5 வயதான நீமோ என்ற மீன் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீன் மிகவும் சோர்வுற்று காணப்பட்டதால், அதனை தூக்கிக்கொண்டு 200 மைல்கள் கடந்து பிரிஸ்டோல் நகரில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம்
 காட்டியுள்ளனர்.
மீனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அதன் கழுத்து பகுதியில் கட்டி ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், மீனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றாவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட உரிமையாளர் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், மீனுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
தண்ணீரை விட்டு மீனை வெளியே எடுத்தால் அது இறந்து விடும் என்பதால் மாற்று வழியை பயன்படுத்தியுள்ளனர்.
அதாவது, மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து அதன் வாய் வழியாக காற்றை செலுத்தி கூர்மையாக கவனித்து அறுவை சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் இடையில் திடீரென மீனின் இதயத்துடிப்பு நின்றுள்ளது.
ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்து இதயத்தை மீண்டும் துடிக்க வைத்துள்ளனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற சிகிச்சைக்கு பிறகு, மீனின் கழுத்தில் இருந்த கட்டி வெற்றிக்கரமாக நீக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருந்த அந்த மீன் பின்னர் உரிமையாளரிடம் திரும்ப கொடுக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசமாக வளர்த்த மீனின் அறுவை சிகிச்சைக்காக அதன் உரிமையாளர் 200 பவுண்ட்(43,246 இலங்கை ரூபாய்) செலவிட்டார் என்பது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 27 மே, 2016

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு!

ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜப்பானில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
 நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து 
பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை ஜனாதிபதியையும்
 அவருடன் வந்த
 தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினர் மிக விமர்சையாக வரவேற்றனர். இந்த வரவேற்பையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தங்கியிருக்கும் நகோயா ஹில்டனில் அவருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு நிகழ்வும்
 வழங்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2016

லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண் விபத்தில் பலி!

இடம்பெற்ற விபத்தில் லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த நடுத்தர வயதுடைய சுகந்தி என்ற பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயார் என் 
அறியவருகிறது.
ஜேர்மனியில் இருந்து பிள்ளைகளின் கல்விக்காக அண்மையில் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்திருந்தார். உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள டட்லியா பல்பொருள் அங்காடியில் 
பணியாற்றியுள்ளார்.
பாதசாரிகளின் நடைபாதையில் பஸ் குறுக்கிட்டபோதே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விபத்து நடந்த மிச்சம் – லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம்
 மேற்கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
பல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டு வந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தமிழ் இளைஞர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலி

கனடா ஒன்ராரியோவிலுள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில், இரு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 வயது 
நிரம்பிய கஜன் கலாபாகன் மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே 
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம் அணியாதிருந்தனர் என ஒன்ராரியோ பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். படகு 
கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல்
 போயிருந்ததாகவும் 
தெரிவிக்கப்படுகிறது. மேலும், திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். 
அத்தோடு 
இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

4,500 கோடி இலங்கை ரூபாய்க்கு அதிபதியான புலம்பெயர்ந்தவர்!


வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்?  ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து
 வருகிறார்.
ரஷ்யாவில் உள்ள சைப்பீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற ஒரு ஏழைச் சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என தீர்மானித்த அவர் கையில் உள்ள சிறிய சேமிப்புடன் கடந்த 1990ம் ஆண்டில் அவுஸ்ரேலியா நாட்டில் குடியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு சுற்றுலா ஏஜெண்டாக தனது பணியை தொடங்கியுள்ளார். பணியில் அக்கறையுடன் ஈடுப்பட்டதால் ரஷ்ய நாட்டை சேர்ந்த பலரை கவர்ந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுலா வர ஏற்பாடுகள் செய்து முன்னேறியுள்ளார்.
பின்னர், சில ஆண்டுகள் கழித்து சொந்தமாக ‘பீட்ஸா உணவுகளை ஒவ்வொரு ஹொட்டலுக்கும் கொண்டு சென்று டெலிவரி செய்யும்’ நிறுவனத்தை தொடங்கி அவரே பீட்ஸாக்களை டெலிவரி செய்துள்ளார்.
ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான உழைப்பை செலுத்திய அந்த நபருக்கு தற்போதைய வயது 58 ஆகும்.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்தின் தற்போதைய மதிப்பு 308 மில்லியன் டொலர் (4,500 கோடி 
இலங்கை ரூபாய்).
இதுமட்டுமில்லாமல், அவுஸ்ரேலிய பணக்காரர்கள் வாங்குவதற்காக போராடி வந்த 4 முக்கிய வீடுகளை இவர் சில தினங்களுக்கு முன்னர் 80 மில்லியன் டொலருக்கு (1,100 கோடி இலங்கை ரூபாய்) சொந்தமாக
 வாங்கியுள்ளார்.
சிட்னியில் உள்ள Coolong என்ற சாலையின் ஓரத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளன. தற்போதுள்ள இந்த 4 வீடுகளையும் இடித்து விட்டு அங்கு ஒரு புதிய ஹொட்டலை கட்ட முடிவு 
செய்துள்ளார்.
வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையில் முன்னேற போராடிவரும் பலருக்கு Leon Kamenev ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

அதிர்ஷ்டவசமாக 90 பயணிகளுடன் தப்பிய விமானம்!!!

பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் 
சிக்கிக்கொண்டது. 
இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பது படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக 
உயிர் தப்பினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஏப்ரல், 2016

பனிமழை ரொரன்டோவில் நீடிக்கும் அபாயம்?

கனடா ரொரன்டோவில் வழக்கமாக ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே வசந்த காலம் ஆரம்பமாகும் என்ற போதிலும், தற்போது அங்கு பனி மழை நீடிப்பதால் இந்த நிலை நீடிக்கும் என்ற முன்னறிவிப்புக்கள்
 தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரலைத் தொடர்ந்து மே மாதத்திலும் இந்நிலை நீடிக்குமா? என்ற அச்சம் ரொரன்டோ வாசிகளிடையே எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு அனைவரினதும் மத்தியில் அதிர்ச்சியை
 ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்று கிழமை) 3 – 5 சென்டிமீட்டர் அளவிற்கு பனி இருந்ததையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால், மீண்டும் 1979க்கு திரும்ப ஆரம்பித்து விட்டதோ ரொரன்டோ காலநிலை என நிபுணர்களும் ஆராயத் 
தொடங்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>