siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 23 நவம்பர், 2012

சிங்கள எம்.பி வேலை பார்த்த பெண் ஒருவரின் மார்பை

         
 
லண்டன் விம்பிள்டன்னில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில், வேலை பார்த்த பெண் ஒருவரின், மார்பை எட்டிப் பிடிக்க முனைந்தார் என்ற குற்றத்துக்காக முன் நாள் இலங்கைத் தூதரும் எம்.பியுமான, ரியூட குணசேகர கடந்த மே மாதம் கைதாகியிருந்தார். உடல் நோவைக் குறைக்க தசைகளை மசாஜ் செய்து விடும் பெண்ணோடு இவர் தகாத முறையில் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டது.
அத்தோடு விம்பிள்டன் நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பும் வழங்கியுள்ளது இதில் வியப்பான விடையம் என்னவென்றால், பெரும் செல்வந்தரான இவர் மீது நீதிபதி மேலதிக விசாரணை ஒன்றை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது தான் ! பட்ட காலிலேயே படும் என்பார்கள் ! அது போல 2 வது வழக்கும் இவர்மீது பதிவாகி இருக்கு என்றால் பாருங்களேன் !

77 வயதாகும் ரியூட குணசேகர ஒரு மூத்த இலங்கை இராசதந்திரி ஆவர். இவர் விம்பிள்டன் பகுதியில் வசித்து வருகிறார். போலந்து நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்த இவர், 2 பிள்ளைகளின் தகப்பனுமாவார்.
இவருக்கு பல வர்த்தக நிலையங்கள் கொழும்பில் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தோடு இவர் பெரும் செல்வந்தரும் ஆவார். கடந்த மே மாதம் இவர் சுவீடிஷ் மசாஜ் எடுப்பதற்காக ஒரு நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரைப் படுக்கவைத்து, ஒரு பெண் இவர் உடல் நோவைப் போக்க மசாஜ் செய்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில், அப் பெண்ணோடு சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார் ரியூட குணசேகர. இதனையும் அவர் பொறுத்துக்கொண்டுள்ளார். ஆனால் இறுதியில் எட்டி மார்பைப் பிடிக்க முனைந்தவேளை, அப் பெண் அங்கே உள்ள ஆபத்து மணியை அடித்துள்ளார். இதனையடுத்து நிலைய காவலாளிகள் உள்ளே நுளைந்து குணசேகரவை பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றில், குணசேகர தாம் அப்பெண்ணைத் தொட முயற்ச்சிக்கவில்லை என்றும் அப்பெண்ணே தன்னிடம் மேலதிகப் பணத்தைக் கோரியதாகவும் கூறினார். ஆனால் இந்தப் பம்மாத்து வார்த்தைகளை பிரித்தானிய நீதிபதிகள் ஏற்க்க மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட பெண்ணையும், மசாஜ் சென்ரன் பாதுகாப்பு ஊழியரையும் விசாரித்த நீதிபதிகள், இறுதியில் குணசேகர குற்றவாளி என அறிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு 1,000 பவுன்சுகள், நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் எனவும், பிரித்தானிய நீதிமன்றத்துக்கு மேலும் 1,200 பவுண்டுகளை தண்டமாகக் கட்டவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே தன்னிடம் வக்கீல் வைத்து வாதாடப் பணம் இல்லை என்று, குணசேகர கூறி, நீதிமன்ற திணைக்களத்திடம் இருந்து(லீகல் ஏய்ட்) பெற்றுள்ளார். இவர் வழக்கை வாதாட, சுமார் 4,170 பவுண்டுகளை அத் திணைக்களம் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மக்கள் வேலை செய்து, தாம் உழைக்கும் சம்பளத்தில் வரிப்பணத்தைக் கட்டி வருகின்றனர். இதில் ஒரு பகுதி நீதிமன்ற திணைக்களத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிப் பணத்தில் இருந்து 4,170 பவுண்டுகளை இவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்று, நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தரும், பிசினஸ் தாதாவுமான குணசேகரவுக்கு ஏன் இவ்வாறு மக்கள் நிதியில் இருந்து பணம் வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.
அதிர்ந்துபோன நீதிபதிகள், இது குறித்து பிறிதொரு தனிப்பட்ட விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கும் வருமானத் துறைக்கும் கட்டளையிட்டுள்ளனர். மொத்தத்தில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் குணசேகர. இலங்கை எம்.பி யின் அட்டகாசம் என்ற தலைப்பில், பல உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் கிடைத்திருக்கும் ஒரு சாட்டை அடி ஆகும். சிங்களவர்கள் தமிழர்களை மட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியே இப்படி என்றால், இலங்கை இராணுவம் எப்படி இருக்கும் ? என்று இனை வெள்ளை இனத்தவர்களும் ஊகிக்க முடியும் அல்லவா

0 comments:

கருத்துரையிடுக