siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 23 நவம்பர், 2012

உடையார்கட்டு பிரதேசத்தில் இருவரது சடலங்கள் மீட்பு !

          
 
முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடையார்கட்டைச் சேர்ந்த எஸ். கோணேஸ்(வயது35), எஸ்.சின்னவன்(வயது40), ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (புதன் கிழமை) மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
எனினும் இருவரும் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடியுள்ளதுடன், நேற்று காலை முதல் குளத்திலும் சுழியோடிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது சடலங்களும், நேற்று மாலை நீரிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. எனினும் இறப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் எவையும் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக