siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 21 நவம்பர், 2012

வங்கி மோசடியாளருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை

பிரிட்டனின் மிகப்பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்ட கிவேக்கு அடோபோலி என்பவருக்கு சவுத்வார்க் நீதிமன்றம் ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கானா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அடோபோலி(32). சுவிட்சர்லாந்தின் UBS வங்கியில் பணியாற்றிய போது செய்த மாற்றங்களால் வங்கிக்கு இலாபம் கிடைப்பதாகக் கணக்கும் காட்டினார்.
ஆனால், உண்மையில் இவர் செய்த மாற்றங்களால் UBS வங்கிக்கு 12 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் மீது திட்டமிட்ட சதி மற்றும் பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த நீதிபதி பிரையன் கீத், "உன்னிடம் ஒரு சூதாடி இருப்பதால் தான் நீ மற்றவர் பணத்தை வைத்து சூதாடி ஜெயிக்க நினைத்திருக்கிறாய். வங்கி விதிமுறைகளை மீறக்கூடிய முரட்டுத்தனம் உன்னிடம் இருந்திருக்கிறது என கூறி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக