siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 16 நவம்பர், 2012

உறைந்த நிலையில் குழந்தைகள், ரத்த வெள்ளத்தில் ???

16.11.2012.By.Rajah..பிரான்சில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையிலும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தன்னுடைய பேரக் குழந்தைகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிஸ் நடத்திய தீவிர வேட்டையில், குளிர்சாத பெட்டியில் இறந்த நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டனர்.
உடனடியாக மூவரின் உடல்களும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து விசாரணை தீவிரமடையும் என்றும், குழந்தைகளை கொன்றது அவர்களுடைய தந்தையாக இருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக