This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 21 அக்டோபர், 2013
சனி, 19 அக்டோபர், 2013
இங்கிலாந்து ராணியுடன் பெண் கல்வி போராளி மலாலா சந்திப்பு
பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதுதவிர பல்வேறு சர்வதேச கவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.
அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பினார்.
லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு தந்தை ஜியாவுதீனுடன் சென்ற அவர், தனக்கு தலிபான்களால் நேரிட்ட அவலம் தொடர்பாக எழுதிய ‘ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை ராணிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இங்கு வந்ததை நான் உயரிய கவுரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து உள்பட எல்லா நாடுகளிலும் வாழும் நிறைய குழந்தைகள் கல்வி உரிமை பெறாமல் உள்ளனர்.
நிறைய குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
அவர்களின் கல்விக்காக எனது பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று ராணியிடம் மலாலா கூறினார்.
அப்போது இடைமறித்த ராணியின் கணவர், ‘எங்கள் நாட்டில் பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்’ என்று நகைச்சுவையாக கூறினார்.
ராணியின் எதிரில் அடக்கமாக இருக்க வேணடும் என்பது மரபு. இதையறிந்த மலாலா முகத்தில் பொங்கி வந்த சிரிப்பை கைகளால் மறைத்துக் கொண்டார்.
வியாழன், 17 அக்டோபர், 2013
விமானம் ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு லாவொஸ் நாட்டில் விமானமொன்று ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 49 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும், மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.
நேற்று லாவோஸில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது
.
லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், விமானம் திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை இந்தக் கொடூர விபத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, விபத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.
புதன், 16 அக்டோபர், 2013
மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா
இஸலாமிய பெண்களது கல்வி உரிமைக்காக போராடியவரும் , இதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பின்னரும் தொடர்ந்து தனது கொள்கையில் விடாப்பிடியாய் அதே நேரத்தில் அமைதியான வழியில்
போராடி வருபவருமான அமைதிக்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கபப்ட்ட மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது இந்தக் குடியுரிமை மலலாவுக்கு வழங்கப்படும்
பட்சத்தில் தலாய் லாமா, Aung San Suu Kyi, அகா கான் , நெல்சன் மண்டேலா மற்றும் Raoul Wallenberg ஆகியோர் வரிசையில் கௌரவ கனடிய குடியுரின்ம பெறும் ஆறாவது நபர் என்ற பெருமையை மலலா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 15 அக்டோபர், 2013
காசா- இஸ்ரேல் இடையே ரகசிய சுரங்கப்பாதை
ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் நுழைவு வாயில் இஸ்ரேல்- காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் உள்ளது.
ஹமாஸ் பிரிவினர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும், இதில் ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
இதன் எதிரொலியாக காசாவிற்கு செல்லவிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்த இராணுவத்தினரை பிரதமர் பெஞ்சமின் நேதன்ஞாஹு பாராட்டியுள்ளார்.
ஆயினும், ரகசிய சுரங்கத்தை ஹமாஸ் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு ராணுவத் தகவல் அதிகாரியான அபு ஒபைடா மறுத்துள்ளார்.
மேலும் இதேபோன்று ஆயிரக்கணக்கான சுரங்கங்களை இஸ்ரேல் இராணுவத்தினர் தோண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சுரங்கப்பாதை வழியே கடந்த 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்ணுக்கு கத்திக்குத்து கனடாவில்
டொரண்டோவை சேர்ந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கனடாவின் வடமேற்கு டொரண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 5.30 மணிக்கு அவரச அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
அப்போது, பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார், ஆனால் மற்ற அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்ததுடன், ஏதேனும் உள் பிரச்னையின் காரணமாக இது நடந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பில் ஏதும் தெரிந்தால் தங்களை அணுகும்படி தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் ?
நேட்டோ படைகளைத் திரும்பப் பெறும் ஒப்பந்தம் தொடர்பாக ஆப்கனுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைவீரர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெறும் எண்ணத்தில் அமெரிக்கா உள்ளது.
அந்த படைகளை வாபஸ் பெறும் ஒப்பந்தத்தில் ஆப்கனுடன், இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நேட்டோ படைவீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆப்கனை விட்டுச்சென்றால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், ஜான் கெர்ரி ஆகியோர் இடையே 2-ஆவது நாளாக சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முன்னேற்ற நிலை: இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்ற நிலையை அடைந்துவருகிறது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என்றனர்.
வெள்ளி, 11 அக்டோபர், 2013
செக்ஸ் பொம்மை கடை மீண்டும் திறக்கப்படுமா?
பாரீசில் சட்டங்களை மீறி நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி செக்ஸ் பொம்மை கடையானது மூடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் நிக்கோலஸ் பன்சல் என்பவர் ஆரம்ப பள்ளியிலிருந்து 90 மீற்றர் தொலைவில் பொம்மைகள் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கடையில் சட்டங்களை மீறி செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுவதாகவும், மேலும் பள்ளிக்கு அருகில் செயல்படும் இந்த கடையை மூட வேண்டும் என கிறிஸ்துவ குழு(CLER) புகார் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவரது கடை மூடப்பட்டது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிக்கோலஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மல்கா கூறுகையில், பள்ளிக்கு அருகில் பொம்மை கடை வைத்திருப்பதை ஒரு குழந்தையோ, பெற்றோர்களோ, ஏன் ஒரு ஆசிரியர் கூட இவர் மீது புகார் கொடுக்கவில்லை.
மேலும் எந்த நீதிமன்றமோ அல்லது வேறு நாடுகளோ பொம்மைகளை ஆபாசமாக பார்ப்பதில்லை, எனவே இந்த கடையினை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பானது வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது.
புதன், 9 அக்டோபர், 2013
ஆணி அடித்து ரத்தம் எடுத்த எஜமானர்கள் -
அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்ணாக சென்றிருக்கிறார். இது வரை எந்த சம்பளமும் அவருக்கு வழங்கப்படாத நிலையில் அது குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
கொதிக்க வைத்த எண்ணையை உடலில் ஊற்றியிருக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் ஆணிகளை அடித்து இரத்தத்தை சிந்தைவைத்து அதனை போத்தலில் சேகரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் போத்தலை திணித்து காயப்படுத்தியும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். காலையில் எடுக்கப்படும் இந்த இரத்தத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தனக்கு தெரியாதென்றும் கூறி கதறுகிறார் பாப்பாத்தி. பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டிருக்கிறார்.
உடலில் பல தீக்காயங்களும், ஆணியேற்றப்பட்ட காய அடையாளங்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இடது கையின் தோல்பட்டையும் உடைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்று பல சிங்கள நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு தமிழ் ஊடகமும் இது குறித்து எதுவும் வெளியிடவில்லை. மலையக தோட்டப் பெண்ணாக இருந்தது தான் ஒரே காரணமோ தெரியவில்லை.
இதனை வெளிக்கொணர்ந்த லக்பிம சிங்கள பெண் பத்திரகையாளரான லாலனி ரத்நாயக பலங்கொட சமூக அபிவிருத்தி மன்ற தலைவரான விகாராதிபதி இம்புல்பே விஜிதவன்ச எனும் பிக்குவின் துணையுடன் ஆஸ்பத்திரி சென்று தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார்.
தூதுவராலயத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் தான் வெள்ளியன்று நாடு திரும்பினேன், விமானத்தில் வைத்து மயக்கமடைந்துவிட்டேன். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அதிகாரிகள் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இன்னுமொரு இலங்கை பணிப்பெண் ஒருவரை புதிதாக எடுத்திருக்கிறார்கள். ஏழ்மையை போக்க என நம்பிப் போகும் எங்களுக்கு இறுதியில் இவ்வளவு தான் மிச்சம்.
உடலில் ஆணிகள் எற்றப்பட்டும், கொல்லப்பட்டும், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், வருடக்கணக்கில் எந்த சம்பளமுமின்றி கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கை பணிப்பெண்களில் கதைகள் தொடர்கதையாக நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. வெட்கங்கெட்ட இந்த இலங்கை அரசோ தொடர்ந்தும் சொந்த நாட்டுப் பெண்களை அந்நிய வருமானத்துக்காக அனுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த பெண்களுக்கு நேரும் கதி பற்றி போதிய நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படுவதில்லை. சவூதி அரசுக்கு நோகும் எதையும் இலங்கை அரசு செய்வதில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.
ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் இந்த கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி மாதக்கணக்கில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் மோசமான பராமரிப்புடன் இப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டாருடன் தொடர்புகொள்ளகூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலுறவை லஞ்சமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள குடும்பத்தினர் தொடர்புகொண்டு அவர்களை மீள பெற முயற்சி எடுக்கின்றபோதும், தூதரகமோ, சவூதி எஜமானர்களின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் விடுதலை பத்திரம் எடுக்கமுடியாதிருப்பதாக தெரிவித்துகொண்டிருக்கிறது. இரக்கமற்ற அந்த சவூதி எஜமானர்களிடமிருந்து என்று இவர்களுக்கு சொந்த நாடு திரும்பும் உரிமை கிடைக்கும்.
பாப்பாத்தியின் கதை முடிவல்ல தொடர்கதைகளில் ஒன்றே ஒன்று
புதன், 2 அக்டோபர், 2013
கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ்
கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.
இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ்.
இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)