siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கொலைகார நகரமாக மாறும் பாரீஸ்!!!

பிரான்ஸின் தலைநகரமான பாரிசும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிலுள்ள பிராங்க்ஸியும் குற்றங்களின் எண்ணிக்கையில் என்றும் ஒரே போல் உள்ளது என பிரான்ஸின் பொலிஸ் தலைமை அதிகாரி பிரடெரி பிசெனர்ட் தெரிவித்துள்ளார்.

வன்முறை செயல்களில் ஈடுபடுதல், சொத்துகளை தாக்கிடுதல், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல், நகரத்தில் பாதுகாப்பில்லாதிருத்தல் போன்றவை பிராங்க்ஸில் அதிகம் நிகழும். அதே போல் பாரிஸிலும் நடக்கின்றது என ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இவரின் இவ்விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து 300 பேர் கொண்ட பொலிஸ் படையை அமைத்து குற்றங்களை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் 25 பேர் கண்ட பொலிஸ் படை ரோந்து பணிக்காக விடப்பட்டுள்ளது. இதில் 2009 முதல் 2012 வரை 1500 பொலிசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக