siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 10 டிசம்பர், 2013

விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்:

பிரெஞ்சு பாராளுமன்றம் விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 பிரான்சில் உள்ள 40 ஆயிரம் விலை மாதுக்கள் நைஜீரியா மற்றும் ரோமானியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாவர்.
இதனை கருத்தில் கொண்டு பிரெஞ்சு பாராளுமன்றம் விதித்துள்ள சட்டப்படி விலை மாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு 1500 யூரோக்கள் ( 2000 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். ஆனால் விலை மாதுக்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டம் விதித்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தைக் கண்டு விலை மாதுக்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். ஏனெனில் தங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முக்கிய பிரெஞ்சு பிரபலங்கள் விமர்சிக்கையில், இந்தக் கடுமையான சட்டம் விபச்சார வியாபாரத்தை நிலத்தடி சுரங்கப்பாதை சட்டவிரோத வர்த்தகமாக மாற்றுவதோடு மட்டுமல்லாது, பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக