siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தரம் குறைந்த செயற்கை மார்பக! நிறுவன உரிமையாளருக்கு

செயற்கை மார்பக தயாரிப்பில் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு
 4 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது அழகுக்காகவும், நோயினால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்தவர்களும் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வதுண்டு.
பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் செயற்கை மார்பகங்களை தயாரிக்கின்றன.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அழகுசாதன நிறுவனம் ஒன்று தயாரித்து விற்பனை செய்த செயற்கை மார்பகங்களை சுமார் 65 நாடுகளைச் சேர்ந்த 3,00,000 பெண்கள் உபயோகப் படுத்தியுள்ளனர்.

இதில் பயன்படுத்தப்பட்ட சிலிகான் ஜெல் என்ற தரம் குறைவாக இருந்ததினால், விரைவிலேயே கிழியத் தொடங்கியதாக புகார் அளிக்க தொடங்கினர்.
இதனை தொடர்ந்து செயற்கை மார்பகம் தயாரித்ததாக குறித்த நிறுவனத்தின் நிர்வாகிகள் நான்கு பேரைக் கைது செய்தது.

வழக்கு விசாரணையின் முடிவில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜீன் கிளாட் மாசுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் அபராதத் தொகையையும் விதித்து மார்செயில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக