siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 மார்ச், 2014

மர்மங்கள் நிறைந்த கலைநிபுணரின் மரணம்

சுவிசை சேர்ந்த பெண் ஒருவர் தன் தாயின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிசை சேர்ந்த 69 வயது நிரம்பிய ரெமி சாக் என்ற கலை நிபுணர் ஒருவர் பிரான்சின் முல்ஹவுஸ் மாகாணத்தில் உள்ள அல்சாஸ் பகுதியில் கடந்த சனவரி மாதம் சடலமாக எடுக்கப்பட்டார்.
இவர் தன் வீட்டின் முன் தலையில் இரத்த கரையுடன் இறந்து கிடந்ததை பார்த்த பொலிசாருக்கு, இவரது மகள் அப்பகுதியில் வசிப்பது தெரியவந்தது.

இவர் தன் மகளுடன் வாழ்ந்து வந்ததால், அவரது மகளின் மீது பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தாயிற்கும், மகளிற்கும் இடையே தகராறு நேர்ந்ததாக கூறப்படுகிறது.
எனினும் அவர் புத்திசுவாதீனமற்றவராய் இருப்பதால் பொலிசார் விசாரணையை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், மனநோயாளியாக உள்ள ரெமியின் மகள் எப்போது குணமடைவார் என கூற இயலாது என்றும் இவர் பூர்ணமாக குணமடையும் வரை விசாரணை ஏதும் நடத்தபடக்கூடாது எனவும் ராபின் என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக