siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 மார்ச், 2014

தீவிபத்தில் நிலவும் மர்மம்!



கனடாவில் கட்டடம் ஒன்றில் மூன்று பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் (Charlottetown) சார்லட்டவுன் மாகாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் சிக்கினர்.

இவர்களை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடும் புகை மூட்டத்தினால் காப்பாற்ற இயலாமல் போயினர்.

இதனையடுத்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அந்நபர்களை மீட்பதற்குள் அவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் காலியான இக்கட்டடத்தில் வாலிபர்கள் சிலர் அவ்வப்போது வந்து செல்வர் என்றும் எவ்வாறு இச்சம்பவம் அரங்கேறியது என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக