siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 12 மே, 2013

தேர்தல்: நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் வெற்றி


பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குபதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இரு தொகுதிகளில் போட்டியிட்ட தெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார். ஆனால் லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.

சனி, 11 மே, 2013

60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை


வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மரியா டி லாஸ் ஏங்கெலெஸ் கோன்ஸாலெஸ்(Maria de los Angeles Gonzalez) என்ற பெண் அதிகாரி பேண்டஸ் எனப்படும் வெனிசுலா அரசு வங்கியில் நிதி மேலாளர் ஆவார்.
தோமாஸ் ஆல்பெர்ட்டோ கிளார்க்(Tomas Alberto Clarke) மற்றும் ஜோஸ் அலிஜாண்ட்ரோ ஹுந்தாதோ(Jose Alejandro Hurtado) என்ற இருவரும் மரியாவிடம் சென்று வங்கி இருப்பைக் கையாளும் பொறுப்பைத் தங்களுக்கு வழங்குமாறு வேண்டியுள்ளனர்.
இவர்கள் வங்கியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு தொழில் தரகர்களாக இருந்ததனால் மரியாவும் இவர்களைத் தமது பிரதிநிதிகளாக நியமித்து நிதி கையாளும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு யூன் வரை இந்த மூவரும் வெனிசூலா வங்கியின் இருப்பை சுவிஸ் வங்கிக்கும், மியாமி நகரில் உள்ள மற்றொரு வங்கிக்குமாக மாற்றிவிட்டனர். வங்கிகளின் பெயர்களைப் பொலிசார் வெளியிடவில்லை.
மேலும் அவர்கள் வெனிசூலா அரசுப் பணத்தைத் தங்களின் சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனை அறிந்த அமெரிக்க அதிகாரிகள் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்

வெள்ளி, 10 மே, 2013

அழகிகளை கண்டுகொள்ளாத இளவரசர் ஹாரி


இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவுக்கு வந்துள்ளதை அடுத்து, அவரது ரசிகைகள் குஷியாகி உள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் ஹாலோ டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சிக்கு சென்றார்.
கேபிடல் ஹில்லில் உள்ள ரஸல் செனட் அலுவலக கட்டிடத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் ஹாரியை காண ஏராளமான இளம் பெண்கள் வந்திருந்தனர்.
ஆனால் அவர் பெண்கள் பக்கம் திரும்பாமல் வியட்நாம் போர் வீரர் செனடர் ஜான் மெக்கெய்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்.
மெக்கெயினின் மனைவி சிண்டி ஹாலோ டிரஸ்ட் உறுப்பினர் ஆவார்.
ஹாரி கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் டிடெக்டர்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
ஹாலோ டிரஸ்ட் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அந்த டிரஸ்ட் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி கடந்த முறை அமெரிக்கா வந்த போது பெண்களுடன் ஹோட்டல் அறையில் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
 

30 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு


 ஸ்காட்லாந்தில் 30 மாடி குடியிருப்பு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் 1960ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் ரெட் ரோட் எனும் பெயரில் ஆறு 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.
கட்டிடம் பழசாகி விட்டதால் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, ஆறு கட்டிடங்களையும், ஒவ்வொன்றாக இடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன் படி கட்டிடங்களில் குடியிருந்த, 4,700 பேர் வேறு குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
அதன் பின் 88 கிலோ எடை வெடி மருந்தின் மூலம் ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டது. மற்ற கட்டிடங்களும் ஒவ்வொன்றாக விரைவில் தகர்க்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப ,,


சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வானிலை அறிவிப்பு மையம் கூறுகையில், தற்பொழுது மலைப்பகுதியில் 50 நாட்களும், மேட்டு நிலப்பகுதியில் 65 நாட்களும் மட்டுமே கோடைக்காலம் நிலவி வருகின்றன.
உலகம் வெப்ப மயமாவதால், சுவிஸ் தட்ப வெப்ப நிலை மத்திய தரைக் கடல் பகுதியைப் போல மாறி விடும். எனவே எதிர்வரும் 2060ம் ஆண்டில் ஜுரா மலையின் சமவெளிப் பகுதியில் கோடைக்காலம் கூடுதலாக ஒரு மாதம் அதிகரித்து விடும்.
இதே போன்று ஆல்ப்ஸ் மலைகளின் பனிப்பொழிவு, வருடத்திற்கு 110 நாட்கள் என்ற நிலை மாறி 80 நாட்களாகக் குறைந்து விடும்.
இதனைத் தொடர்ந்து மேட்டு நிலங்களில் சராசரியாக ஒரு மாதம் பெய்யும் பனி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் பத்து நாட்கள் மட்டுமே பெய்யும் என்று தெரிவித்துள்ளது
 

வியாழன், 9 மே, 2013

பெல்ஜியம் சுவிஸ், பி.வி.சி. தயாரிப்புகள் "


சுவிட்சர்லாந்து நாட்டின் இனியோஸ்(Ineos) நிறுவனமும், பெர்ஜியம் நாட்டின் சோல்வே நிறுவனமும் பாலி வினைல் குளோரைடு எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.
இவை இரண்டும் போட்டியாளர்களாக இருந்த காலம் மாறி தற்பொழுது இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோல்வேயும், இனியோசும் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினால் உலகத்தின் முதல் மூன்று பெரிய பிவிசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகப் பிரபலமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இதன் கிளைகள் ஒன்பது நாடுகளிலும், இதில் சுமார் 5650 பேர் பணியாற்றுவர என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பாவில் கச்சாபொருட்களின் விலையும், மின்சாரக் கட்டணமும் அதிகரித்து வருவதால் தனித்து செயல்படுவதை விட இணைந்து செயல்பட்டால் உற்பத்தியும் அதிகரிக்கும், இலாபமும் உயரும் என்று சோல்வே நிர்வாகக் குழுவின் தலைவர் ஜீன் - பியர் கிளாமடி யூ(Jean-Pierre Clamadieu) தெரிவித்துள்ளார்.
மாறி வரும் ஐரோப்பிய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், உலக உற்பத்தியாளர்களிடையே அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் வகையிலும் இந்த கூட்டு முயற்சி அமையும் என்று இனியோசின் தலைமை நிர்வாக அலுவலர் ஜிம் ரேட்கிளிஃப்(Jim Ratcliff) கூறியுள்ளார்
 

குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் ,.,


சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 3.1 சதவீதமாக இருந்த வேலையில்லாப் பிரச்னை தற்பொழுது குறைந்து 2.8 சதவீதமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 1,90,367 ஆகும். அதற்கு முந்தைய மாதம் இந்த எண்ணிக்கை 3857 கூடுதலாக இருந்தது.
ஜெனீவாவிலும், கிராபூண்டனிலும் கடந்த மாதம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.5 சதவீதமாக இருந்தது. இதுவே மார்ச் மாதத்தில் 5.3 ஆகவும், கடந்த ஏப்ரலில் 4.9 சதவீதமாகவும் இருந்தது.
சுவிட்சர்லாந்தின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் ஓப்வால்ட் மற்றும் நிட்வால்ட் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக(0.9) உள்ளது. ஆனால் வேலையில்லாப் பிரச்னை ஜுரிச்சிலும்(3.2%), வாட் மாநிலத்திலும்(5%) மாறாமலிருக்கிறது.
பெர்ன் (0.1%), பேசெல் நகரம்(3.8%), வலாய்ஸ்(4.1%), நியுசேட்டல்(5.1%) போன்ற நகரங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து கொண்டே வருவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
 

புதன், 8 மே, 2013

காயமடைந்த சுவிஸ் தமிழ்ச் சிறுவனும்=?


 ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர்.இன்று அவ்விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான்.
 கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது மரணமானான்.
  பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 தம் செல்வப் புதல்வர்கள் இருவரையும் பரிதாபமாக பறிகொடுத்த பெற்றோர் ஜவீன் ஜெயந்தி தம்பதியினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களும், பிள்ளைகளுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் எல்லோரயும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
 

செவ்வாய், 7 மே, 2013

ஹெய்டா ஏரியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்:



 
கிழக்கு ஜேர்மனியில் துரிங்கியா மாவட்டத்தில் உள்ள ஹெய்டா(Heyda) ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் மீன் பிடிக்கும் ஆர்வலர்கள், இதுவரை சுமார் 25 தொன் எடை அளவில் இறந்த மீன்களை ஏரியிலிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் இந்த ஏரியில் யாரும் படகுகளில் பயணிக்க அஞ்சுகின்றனர். ஆனால் இந்த ஏரியில் ஆபத்து அல்லது நோய்த்தொற்று எதுவும் காணப்படவில்லை என்பதால் அரசு அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மீன்களின் இறப்புக்கு காரணம் தெரியாமல் குழம்பி போகியுள்ளனர்.
இது குறித்து இல்மெனோ நகராட்சியின் செய்தித் தொடர்பாளரான எக்கார்டு பேயர்ஸ்மித்(Eckhard Bauerschmidt) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மீன்களின் அழிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நச்சுத்தன்மையுள்ள நீர்ப் பாசி படர்ந்து இருந்தால் மீன்கள் இறந்து போக வாய்ப்புண்டு. ஆனால் அந்த விஷப்பாசி இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், இந்த ஏரியின் தண்ணீரைத் தினமும் விஞ்ஞானிகள் இனி பரிசோதிக்கவுள்ளனர். இதன் மூலம் மாற்றங்கள் ஏதேனும் தெரிகிறதா என்று ஆராய்வர். இவ்வாறு ஆராய்வதால் மீன்களின் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

மயோன் எரிமலை வெடிப்பு :,.,


பிலிப்பைன்ஸ் நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றான மயோன் எரிமலை அலபய் மாகாணத்தில் உள்ளது.
தலைநகர் மணிலாவில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை இன்று திடீரென வெடித்து புகையையும் சாம்பலையும் வெளியேற்றியது. அப்போது 500 மீட்டர் உயரம் வரை அடர்த்தியான சாம்பல் வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்த நேரத்தில் எரிமலையை சுற்றிப்பார்க்க சென்ற 3 சுற்றுலா பயணிகள் இறந்து விட்டதாகவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த நேரத்தில் அவர்கள் அந்த மலைச் சரிவில் நின்றதாக கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
மயோன் எரிமலை சரியான கூம்பு வடிவ தோற்றத்தை கொண்டுள்ளதால் அந்த எரிமலையை காண சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருகிறார்கள்.
மிக ஆக்ரோசமான இந்த எரிமலை இது வரை 48 முறை வெடித்து சிதறியுள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் மூத்த புவியியலாளர் இது நீராவியால் ஏற்பட்ட சிறிய வெடிப்பு மட்டுமே, இதனால் மக்கள் வெளியேறத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்