siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 20 மே, 2013

ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா:


 ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சோதனை வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இச்செயலுக்கு தென் கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 3 ஏவுகணைகளை பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வடகொரியா நேற்று முன்தினம் ஏவியது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு ,,

     
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை "பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர்.
இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன.
அனுப்பப்பட்ட 45 எலிகள், 15 பல்லிகள் உள்ளிட்ட பிராணிகளில் எத்தனை உயிரோடு இருக்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிடவில்லை.

ஞாயிறு, 19 மே, 2013

சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

 
 அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார்.
 ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளார் என்று அவரது அப்பா ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார். எவரெஸ்ட்டுடன் உலகின் ஏழு மலைச்சிகரங்களை அடைந்து ராஹா தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார். 

பன்னாட்டு விளையாட்டு அமைப்பின் நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது

சனி, 18 மே, 2013

ஐ.நாவுடன் முரண்டு பிடிக்கும்?

சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறதுஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவுக்கு செல்ல கோரிக்கை விடுத்த போதும், அது சிறிலங்கா அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனல் 4 வெளியிட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த விசாரணைகளை நடத்தவே ஐ.நா பிரதிநிதி கொழும்பு வர விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளி உண்மையானதே என்று 2011 ஏப்ரலில் கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கூறியிருந்தார்.

இதன் பின்னர் சிறிலங்காவுக்கு வர அவர் விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பவில்லை.

இந்தநிலையில், வரும் வாரம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 23வது அமர்வில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, சிறிலங்காவுக்கு வர அனுமதிக்கும் படி அவர் மீண்டும் கோரியுள்ளார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 17 மே, 2013

தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை:


ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் அளித்த ஊடகப் பேட்டியில், கணவர் இறந்த பின்னர் தனித்து வாழும் பெண்களால் தோட்டத்தைப் பராமரிக்க முடியாது, எந்த வேலையையும் செய்ய இயலாது, எதைச் சொன்னாலும் எரிச்சல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து வந்திருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நஃபீசா ஓ(Nafize Ö) என்பவருக்கு வீடு ஒதுக்கித் தர முடியாது என்று ஹேன்ஸ் தெரிவித்ததால் அந்தப் பெண் மிகவும் கோபப்பட்டுள்ளார்.
இது குறித்து நஃபீசா கூறுகையில், நான் நான்கு பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னால் ஆறு ஆண்களின் வேலையைச் செய்ய முடியும். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு வீடு கிடையாது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையை ஹேன்சுடன் பேசி  தீர்த்து வைப்பதாகக் ஹேம்பர்க் தோட்டக்காரர் கழகத்தினைச் சேர்ந்த டிர்க் சீல்மேன்(Dirk Sielmann) என்பவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு ??


வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்நிலையில் திடீரென 2012ம் ஆண்டு யூலையில் தனது மனைவியுடன் பொது மக்கள் மத்தியில் தோன்றி அதிர்ச்சியளித்தார்.
அதற்கு முன்னரே இத்தம்பதிக்கு 2010ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜனாதிபதி கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக சுவிட்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் விலை உயர்ந்த குழந்தை உணவு பொருட்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஜனாதிபதி யுன் தனது குழந்தைகளுக்காவே இந்த உணவு பொருட்களை இறக்குமதி செய்து வட கொரியாவில் விற்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதியும், கிம் ஜாங்-யுன் தந்தையுமான கிம் ஜாங்-இல்லுக்கு மனைவி தவிர சட்டத்துக்கு விரோதமாக 3 காதலிகள் இருந்தனர்.
கிம் ஜாங்-யுன் தவிர அவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது கிம் ஜாங்- யுன்னும் இந்த விடயத்தில் தனது தந்தை வழியை பின்பற்றுவதாக செய்தி வெளியாகி உள்ளது

கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்


கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும்.
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில், 986 தட்டுகள் இது போன்று தெரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது.
மேலும் முன்னர் இருந்ததைவிட, தற்பொழுது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார்.
இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. அதாவது முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ போன்ற பல்வேறு மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.
10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது, பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.
இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளிமையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய


அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார்.
மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலியா, குயின்ஸ்லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார்.
ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த.,


பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் 18ம் திகதி அன்று நடைபெற்ற இந்தக் கொள்ளை, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாகும்.
விமானம் சூரிச்சுக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்கள் சரக்குப் பெட்டகத்தைத் திறக்கும் படி மிரட்டி அதில் ஏற்பட்டிருந்த வைரங்களையும், ரொக்கப் பணத்தையும் ஏராளமாகத் திருடிச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையடித்த ரொக்கப்பணத்தில் பெரும் பகுதியை பொலிசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 16 மே, 2013

தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி:


எத்தனையோ விதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வித்தியாசமான நடனம் இது,சிலி நாட்டின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஜோடி ஒன்று தமது திறமையை காட்டியுள்ளது.
இது வழமையைப் போன்று சாதாரண மேடை நடனம் அல்ல. முற்றிலும் மாறுபட்ட ஜிம்னாஸ்டிக் வகையிலான நடனம்.

அதுவும் இரு நீர்த் தொட்டிக்குள் இவர்கள் காட்டும் திறமை அபாரமானது.

பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அவர்களின் திறமையைக் காண காணொளியை பாருங்கள்,