siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் சீன இளைஞர்கள்


நல்ல வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் பழக்கம், சீன இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
நன்கு படித்திருந்தாலும், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைப்பதற்கு முக அமைப்பும் முக்கியம் என்ற எண்ணம் சீனாவில், பெரும்பாலான இளைஞர்களிடையே பரவியுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்டா மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு உள்ளது.
இங்கு தினமும் 200 பேர் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களின், 70 சதவீதம் பேர் மாணவர்கள்.
கோடை விடுமுறையான, கடந்த மாதம், ஏராளமானோர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.
"நல்ல தோற்றமுள்ளவர்கள், சக ஊழியர்களிடம் நற்பெயர் பெற முடியும்' என்ற எண்ணம் அனைவரிடமும் நிலவுகிறது. இந்தக் காரணங்களுக்காக, தன் முகத்தை 20 ஆயிரம் ரூபாய் செலவில், சீரமைத்து கொண்டதாக பீஜிங்கில், முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கும், சேன் ரோங் கூறியுள்ளார்.
 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படும் வினோதம்!!


பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹூசைன், அமான் ரம்ஜான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மதம் தொடர்பான கேள்விகள், விவாதங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு, இதுவரை மொபைல் போன், வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் பரிசாக வழங்கப்படுகிறது.
விவாத நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்தும் முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை, குழந்தையற்ற தம்பதிகளுக்கு பரிசளிப்பதில் தவறில்லை என்கிறார் ஹூசைன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் குழந்தையை பரிசாக பெற்ற ஆயிஷா ரியாஸ் என்ற பெண், இந்த நிகழ்ச்சி தன்னை ஒரு தாயாக முழுமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 3 குழந்தைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற குழந்தைகள் அமைப்பு ஒன்றுடன்இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது {(வீடியோ,புகைப்படங்கள், இணைப்பு})






 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி!!


இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் – அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட்களுக்கும்முன்பாக நடிகை கனகா, புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்ப‍தாகவும், அவர் ஆலப்புழையில் உள்ள‍ ஒரு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்க‍ப்படிருப்ப தாகவும் செய்திகள் வந்தது. அதை வ. மேலும், நேற்று பிற்பகலில் நோயின் தீவிரம் காரணமாகவும் சிகிச்சை பலனின்றியும், அவர் இறந்து விட்டார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆனால்,  அவர், நேற்று மாலை செய்தி யாளர்கள் முன்னிலையில் தோன்றி, சிரித்துக் கொண்டே பேட்டி அளித்து அனைவரு க்கும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளார். அவரது பேட்டியில் தான் உயிருடன் இருப்ப‍தாகவும், தனக்கு எந்தவிதமான வியாதியும் இல்லை என்றுகூறி சிரித்தார். இதோ அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோ .
எது எப்ப‍டியோ, இத்தனை நாட்களாக நடிகை கனகா எங்கிருக்கி றார் என்ற மர்மம் இதன் மூலம் விலகி, அவர் வெளியுலகிற்கு வந்து ள்ளார். மீண்டும் அவரது வாழ்வில் முன்னேற்ற‍ங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழ
      இந்த   இணையம் சார்பாகவு ம், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
 

புதன், 31 ஜூலை, 2013

தொலைபேசி அழைப்பு 79 பேரின் உயிரை பறித்தது

 
கடந்த வாரம் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி கடந்த வாரம் சென்ற ரெயில் விபத்துக்குள்ளானதில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர்.
66 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்த அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பும் போது தடம்புரண்டு கவிழ்ந்த காட்சியின் சி.சி.டி.வி. பதிவுகள் உலக ஊடகங்களில் எல்லாம் ஒளிபரப்பாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விபத்து நிகழ்ந்த போது ரயில் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிய தகவல் விபத்துக்குள்ளான ரயிலின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிப்பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான் காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். காயங்கள் ஆறி குணம் அடைந்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடந்து ரயிலை இயக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள் பொலிசார் வேடமிட்டு!!


பாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிரவாதிகள், 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இதில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர், இவர்களில் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்த 150 தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறையின் வெளிப்புற தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும் சிறையில் இருந்த 300 கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்து சென்றுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஹிதுல்லா ஷாஹித், தற்கொலை படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சிறைத்துறையின் ஆலாசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார்.
மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் டிரான்ஸ்பார்மர்களை வெடிகுண்டு வீசித் தகர்த்து சிறையை இருட்டாக்கியதும், பொலிசார் தங்களை துரத்தாமல் இருக்க வாகனங்களை சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 

திங்கள், 29 ஜூலை, 2013

தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 47 பேர் உடல் சிதறி ?

 

ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஷியா பிரிவு மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன.
தொடர்ந்து வெடித்த 12 கார் குண்டுகளால், 47 பேர் உடல் சிதறி பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இக்கொடூர தொடர் கார்குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.{புகைப்படங்கள்}


 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

நீரில் மூழ்கிய சிறுவனின் உடல் கண்டெடுப்பு


பிரான்ஸ் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது அவனது தந்தையும் உடன் இருந்தார்.
மீட்பு பணியாளர்களின் உதவியை நாடிய போதிலும் சிறுவனின் உடலை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்காக 3 உலங்குவானூர்திகள், மற்றும் படகு ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கிரன் நைட் என்ற குறித்த சிறுவனின் உடலம் மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் பேஸ்புக்கால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்!


ஜேர்மனியில் பேஸ்புக்கை பயன்படுத்தும் நான்கில் மூன்று பங்கு மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
மன்ஸ்டார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலே இந்த தகவல் வெளிவந்துள்ளது.
33 பாடசாலைகளிலிருந்து சுமார் 5,600 வரையான மாணவர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அநாவசியமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் போன்றன தம்மை வந்தடைவதாக நான்கில் மூன்று பகுதியினர் தெரிவித்துள்ளனர்

சனி, 27 ஜூலை, 2013

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: ரொறன்ரோவில் சம்பவம்


கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொறன்ரோ பகுதியில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றச் இசம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒன்ராறியோவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், டுண்டாஸ் வீதியை சுற்றி பொலிசார் நின்றுகொண்டிருந்ததாகவும், ஒரு பொலிசார் அவர்கள் ஒருவரைப் பார்த்து கத்தியைக் கீழே போடுமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் ஒரு பொலிஸ்காரர் 10 தடைவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பத்திற்கு பின்னர் குறித்த நபரை வைத்திசாலைக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இத்துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை

மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து கற்பழித்த காமூகன்


அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து கற்பழித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தை சேர்ந்தவர் ஏரியல் காஸ்ட்ரோ(வயது 53).
இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட்(வயது 20 ),அமெண்டா பெர்ரி(வயது 17), கினா டிஜெசஸ்(வயது 14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தான்.
இவர்களை கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வெளியே விடாமல் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளான்.
இதில் பெண் ஒருவர் கர்ப்பமான போது, கருவை கலைக்கும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.
இந்நிலையில் கடந்த மே மாதம், மூன்று பெண்களில் ஒருவர் தப்பித்து வந்த போது தான், இவனின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் காஸ்ட்ரோவை கைது செய்ததுடன், மற்ற பெண்களையும், பெர்ரிக்கு பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தனர்.
 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், காஸ்ட்ரோவுக்கு ஜாமினில் வெளியே வராதபடி, ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவனது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன