siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

யாழ். நகரில் இளம் பெண்களுடன் சேஷ்டைபுரிந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

இளம் பெண்களுடன் சேஷ்டை புரிந்த இளைஞர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம் பெற்றது.

தனியார் வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர்களும் ஆண் ஊழியர்களுமாக வங்கியின் நடவடிக்கை சம்பந்தமான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவ்வேளையில் குறிப்பி;ட்ட இடத்திற்கு வந்த நான்கு இளைஞர்கள் குறிப்பி;ட்ட பெண் ஊழியர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் கையடக்கத் தொலைபேசி மூலம் படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனால் ஆத்திரமுற்ற பெண் ஒருவர் இளைஞர்களுக்குத் ஏதோ கூறவே ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர் பெண்ணைத் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பி;ட்ட இளைஞர்களைப் பிடிக்க முற்பட்ட வேளையில் மூவர் தப்பி ஓடிவிட ஒருவர் வகையாக மாட்டிக்கொண்டார்.குறிப்பி;ட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்