siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உடலும் நீயே உயிரும் நீயே[கவிதைகள்]


 

 
11-09-2012.By.Rajah.காதல்கவிதைகள்
 
காற்றுப்படாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க...!
இளமைக்குள் ஏக்கங்கள்
இறக்கைகட்டி பறக்கிறது
விழிகளிலும் விரகதாபம்
வீம்புக்கு பிறக்கிறது.....!
காற்றும் பேசும் என்பதை
தூக்கத்தில் கனவுகள் நினைவூட்ட
தாய்மடி வரமென்று -சுடும்
தலையணைகள் கவி எழுத ...!
இன்றுவரை தேடுகிறேன்
எண்சான் உடம்புக்குள்
எங்கிருக்கு ஆசையென்று
எரித்திடவும், எறிந்திடவும் ...!

உயிருக்குள் உயிர் பூவாய்
உலகை நான் காணும்முன்
உதைக்கும்போதேல்லாம்
மடிதடவி மகிழ்ந்தவளே..!

காதல் பாவம் என்று -நீ
கருவிலே சொல்லி இருந்தால்
காட்சிகள் நிறைந்த மண்ணில்
சாட்சிகள் இன்றி அழிந்திருப்பேன்...!
பூக்கள் கூட எனக்காய்
புலம்பி இருக்காது
நாட்கள் கூட எனக்காய்
நலிந்து இருக்காது...!