
05.09.2012.by.rajah.மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்த
சம்பவமொன்று புத்தளம் கற்பிட்டி கந்தக்குளி பகுதியில் இன்று 3.30 மணியளவில்
இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தினால் 17 வயதுடைய ருவான் அபயகோண் என்ற இளைஞனே
பலியாகியுள்ளதுடன் படுகாயமடைந்த நால்வரும் கற்பிட்டி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்