siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் பலி!???

          
Sunday 28 October 2012  By.Rajah. 
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும், மின்னல் தாக்குதலுக்கு இலக்கான பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் மின்னல் தாக்குதலின் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்திலேயே மின்னலின் காரணமாக அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாதத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மழைகாலங்களில் மக்கள் தமக்கான பாதுகாப்பு குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது