siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

இலங்கையின் மெண்டிஸ் மலேசியாவில் விளையாடுகிறார்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். அஜந்த மென்டிஸ் காயமடைந்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் கழக மட்டத்தில் விளையாடுவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்த அஜந்த மென்டிஸ், மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னா ஆகியோர் இலங்கை இராணுவ அணிக்காக மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கை இராணுவ அணி நட்புறவு கிரிக்கெட் போட்டிகளுக்காக மலேசியா சென்றுள்ளதுடன், அங்கு சென்ற இராணுவ அணியின் தலைவராக அஜந்த மென்டிஸ் செயற்பட்டுள்ளார்.
இவருடன் மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னாவும் இணைந்துள்ளார். 3 போட்டிகளில் அங்கு இராணுவ அணி போட்டிகளில் பங்கேற்றது.
இதில் இலங்கை அணி, ரோயல் மலேசியன் விமானப்படை அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், மலேசிய கிரிக்கெட் வாரியத்தின் ஜனாதிபதி அணியை 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மலேசியப் படை வீரர்களுக்கெதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் அஜந்த மென்டிஸ் காயம் காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.