siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 15 நவம்பர், 2012

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்!?


        15.11.2012..By.Rajah..யுத்தத்தின்போதுஇலங்கையில்செயற்பட்டஐக்கியநாடுகள்சபையின்  முகவர்நிறுவனங்களுக்கோஐ.நா.வின்பணியாளர்களுக்கோ அரசாங்கம்ஒருபோதும்எவ்விதமானஅழுத்தங்களையோபிரயோகிக்கவில்லைஎன்கிறது இலங்கை அரசு.
அச்சுறுத்தல்களைபிரயோகிக்கவில்லை.ஐ.நா.பணியாளர்கள் எவராலும்அழுத்தங்களுக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்குஒருநாடு அழுத்தமோ கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் செயற்பட்டவிதம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக விசாரணைக்குழுவின்அறிக்கைஉத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னர் அதுதொடர்பில் எதுவும் கூறமுடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் செயற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கோ ஐ.நா. பணியாளர்களுக்கோ அரசாங்கம் ஒருபோதும் எவ்விதமான அழுத்தங்களையும் வெளியிடவில்லை. அவர்கள் எவராலும் அச்சுறுத்தலுக்கு உட்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு நாடு இவ்வாறு அழுத்தமோ, கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? அவ்வாறு எவ்விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. யுத்தகாலத்தில் நாம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்.
ஐ.நா எம்முடன் இணைந்தே செயற்பட்டது. அதனை எடுத்து அழுத்தங்கள் எதுவும் இருக்கவில்லை. அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கின்றேன்.
எதிர்வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நாங்கள் போருக்குப் பின்னரான நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவோம்.
அதில் சிறந்த முன்னேற்றங்களைக் காட்டமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும் என தெரிவித்தா.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் ஐ.நா செயற்பட்டவிதம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அந்த அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. அறிக்கையின் உள்ளடக்கங்கள் சில கசிந்துள்ளனவே தவிர எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே அதுதொடர்பில் நான் தற்போது கருத்து வெளிவிடுவது சரியல்ல எனப் பதிலளித்தார்

0 comments:

கருத்துரையிடுக