siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 30 நவம்பர், 2012

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் பலி

 
மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
119- 120 ஆவது மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக