siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஜெர்மனி இந்தியாவில் ரூ.6,600 கோடி முதலீடுசெய்கிறது ???

இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்காக, ரூ.6,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக இந்திய-ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனிக்கு 2 நாள் அரசு முறை பயணம்  மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டீன்மீரை சந்தித்து பேசினார்.  இச்சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம், ஆப்கனில் நிலவும் சூழல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியாவும்,...

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தொலைபேசி தகவலை வைத்து தொற்று நோய் பரவுவதை கண்டுபிடிப்பு.???

தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை தொலைபேசி தகவல்களை வைத்து கண்டறிவதற்கான ஆய்வொன்று  ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு ஆப்ரிக்க நாடான கென்யாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக 1.5 கோடி மக்களின் தொலைபேசி தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தொலைபேசியில் பேசப்பட்ட நேரம், குறுந்தகவல் அனுப்பிய நேரம், அதன்போது தொலைபேசி...

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி

உலகையே உலுக்கிய ரிவாண்டா நாட்டு இனப்படுகொலையில் சுமார் 10 லட்சம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரிவாண்டாவின்  அதிபர் Juvenal Habyarimana கடந்த 1994ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்....

புதன், 12 ஆகஸ்ட், 2015

புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றத் தீர்ப்பினால் நெருக்கடியிலாம்???

பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பினால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம்  சுமத்தப்பட்ட வேறு நாட்டு பிரஜை ஒருவரை பிரிட்டன் சட்டங்களின் அடிப்படையில் பிரிட்டனில் கைது செய்து வழக்குத் தொடர அதிகாரமில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்த...

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

காரை 360 டிகிரியில் சுழற்றிய நபர்: கதிகலங்கிய காரோட்டிகள் (காணொளி )

பிரித்தானியாவில் குடிபோதையில் கார் ஓட்டிய நபருக்கு 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 நெடுஞ்சாலையில், கடந்த நவம்பர் மாதம் மார்டின் கண்ட்ரில்(43) என்பவர், மின்னல் வேகத்தில் கார் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், தனது காரை 360 டிகிரியில் சுழற்றி பிற காரோட்டிகளை கதிகலங்க செய்துள்ளார். இவரின் இந்த செயலை நபர் ஒருவர் வீடியோ எடுத்து பொலிசிடம் புகார் அளித்துள்ளார்,...

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15.

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்  சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்???

ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர். மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது. அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான...

சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரான்ஸில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு பரவலாக தடை உள்ள நிலையில், இனி நாடு முழுவதும் சேவல் சண்டைக்கான புதிய மைதானங்களை அமைக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டி போல, சேவல் சண்டையும் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேவல் சண்டைக்கு பெரும்பாலான நகரங்களில் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் புறப்பகுதிகளில் இந்த...

சமமாக காதலோடு போட்டியிடும் நட்பு: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது. சமுதாயத்துக்கு பயனுள்ள நல்ல விடயமாக இருக்கிற ஒவொவொன்றுக்குமே வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அங்குள்ள கலாச்சார அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட பண்டிகைகள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பது சிறப்புடையதுதான். அதேவேளையில், உலகத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு சமுதாயம் தன்னை...

சனி, 1 ஆகஸ்ட், 2015

தந்தை மகனை தூக்கி விளையாடியதால் கைது ???

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகனை முதுகில் தூக்கி விளையாடும்போது, எதிர்பாராதவிதமாக மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட குற்றத்திற்காக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் வசித்து வந்த இந்த தந்தை, கடந்த பிப்ரவரி 6ம் திகதி, தனது மூன்றரை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரன்டல்...