siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 30 ஜூலை, 2016

தமிழர்வளத்த நாய்க்கு கனடாவில் மரண வீடு நடத்தியுள்ளார்.!

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே  இல்லை இவற்றுக்கு...

வெள்ளி, 29 ஜூலை, 2016

வெளியேற்றப்படுவார்கள்.தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்

ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார். தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று  அவர் கூறினார். தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால்,...

சனி, 23 ஜூலை, 2016

பலர்மர்ம நபர் துப்பாக்கிச் சூடுட்டில் ஜெர்மனியில்பலியானதாக தகவல்

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் காவல்துறை அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. மூனிக் நகரின் வடமேற்கு மாவட்டமானT மூஸச் மாவட்டம் முற்றாக காவல்துறையால்...

செவ்வாய், 19 ஜூலை, 2016

நாய்களை பாம்புக் கடியிலிருந்து பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு!

ஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக்கான நாய்களை சிசிச்சையளிப்பதற்கென Anti-Venom கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CSIRO scientists, சிறிய பயோடெக் நிறுவனமான Padula Serums உடன் இணைந்து Eastern Brown மற்றும் Tiger பாம்புக்கடிக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கென Anti-Venom தயாரிக்கும் பணிகளில்  ஈடுபட்டிருந்தனர். ஆஸியானது உலகத்திலேயே மிகக் கொடிய 10 பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளது. இது வரையிலும் Anti-Venom ஆனது மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கவே...

வெள்ளி, 15 ஜூலை, 2016

வன்முறை கவலை அளிக்கிறது: ஐ.நா.விற்கு பாகிஸ்தான் கடிதம்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா.விற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் காமண்டர் பர்கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள்   நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்....

திங்கள், 11 ஜூலை, 2016

மீண்டும் வடகொரியா அத்துமீறல்: தென்கொரியா குற்றச்சாட்ட?

அணு ஆயுத பசியால் அலையும் வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல்  உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து...

பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி: மால்கோம் டர்ன்புல் மீண்டும் பிரதமராக பதவி !

ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் 1987–ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும்...

வியாழன், 7 ஜூலை, 2016

பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு!

பங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி  வருகிறார்கள் ...

வெள்ளி, 1 ஜூலை, 2016

இத்தாலியில் வட்டி அறவிட்ட இலங்கையர் கைது!

இத்தாலியின் மெசீனா நகரில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இலங்கையர்கள் பலரிடம் கொடுத்த பணத்திற்கு வட்டி பணம் பெற்றுக்கொண்டிருந்த போதே இத்தாலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யும் போது இவரிடம் வட்டிபணம் 250 யூரோக்கள் இருந்ததாகவும், அத்துடன் கடவுச் சீட்டுக்கள் பலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபரின் வாகனத்தை...