siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

நிலநடுக்கம்:இத்தாலியில் வெடிக்கத் தொடங்கிய எட்னா எரிமலை

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது. நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டமையைத் தொடர்ந்து எட்னா எரிமலை  வெடிக்க ஆரம்பித்தது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக...

சனி, 15 டிசம்பர், 2018

இது தான் அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி YouTube அறிவித்தது

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube  வெளியிட்டு வருகிறது. YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன் காத்திருப்பர். ஆனால், இந்த ஆண்டு வெளியான YouTube Rewind 2018 காணொளி, இணையவாசிகளை முகம் சுளிக்க  வைத்துள்ளது. தளத்தின் ஆக அதிகம் வெறுக்கப்பட்ட...

திங்கள், 10 டிசம்பர், 2018

இலங்கை சிறுமிக்கு ஐரோப்பிய நாடொன்றில் நேர்ந்த துயரம்88-

இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.  நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும்...

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வௌிநாடுகளில் 220 இலங்கையர்கள் மரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது. இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர்  ஒருவர் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர். 25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு...

திங்கள், 3 டிசம்பர், 2018

தீவிரமடைந்த போராட்டம் பிரான்ஸ் பாரிஸில்

பிரான்ஸ் பாரிஸில் போராட்டம் தீவிரமடைந்தமையைத் தொடர்ந்து G20 உச்சி மாநாட்டிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை  நடத்தியுள்ளார். எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து பாரீஸில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் இறங்கியுள்ளனர். பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மேக்ரான் கூட்டிய அவசரக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். அவசர...

ஐ.நா எச்சரிக்கை மனிதகுலம் முற்றாக அழியும் அபாயம்?.

மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் உடனடி நவடிக்கைய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை...

உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03:

ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. 1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982...

திங்கள், 26 நவம்பர், 2018

தமிழர்! கனடாவில் உறவினர்களின் கண்ணீருடன் நல்லடக்கம்

கனடாவின் கொலைசெய்யப்பட்ட இலங்கை அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம்  செய்யப்பட்டது.   இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு  கதறியழுதனர்  இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், படகுமூலம்  கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்றார்.  அங்கு...

வியாழன், 1 நவம்பர், 2018

சீனா தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா. கனடாவை எச்சரித்த

கனடாவில் வாழும் தமது பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது. பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக்...

செவ்வாய், 30 அக்டோபர், 2018

நியூசிலாந்தில் 6.2 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

..நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  சுமார் 165 கிலோமீற்றர் பூமிக்கு அடியில் குறித் நிலநடுக்கம் 6.2  ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் பகுதி சுமார் 30 வினாடிகள் வரை ...

திங்கள், 29 அக்டோபர், 2018

இந்தோனேசியாவில் 188 பேருடன் காணாமல்போன பயணிகள் விமானம்

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் உட்பட 188 பேர்  இருந்துள்ளனர். ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது. இது பாங்கா பெலீடூங் தீவின்...

புதன், 18 ஏப்ரல், 2018

உலகைக் கலங்க வைத்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருது!

கடந்த ஆண்டுக்கான புலிட்சர்  பிரேக்கிங் நியூஸ் போட்டோகிராபி விருது `டெய்லி ப்ராக்ரஸ்' பத்திரிகையின் ரேயான் கில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது  வழங்குகிறது. இந்த ஆண்டு 15 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் போட்டோகிராபி பிரிவில், ரேயான் கில்லிக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சார்லட்டேஸ்வில்லி  நகரில் இனவெறிக்கு...

கால்பந்து போட்டி தொடக்க விழாவில் புகுந்த கரடி.பங்கேற்ற காட்சி

ரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி  நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற டிம் என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி, தனது முன்னிரு கால்களை தட்டி ஒலி எழுப்பிய டிம் பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை  தொடங்கி...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் நாளை ஆபத்து

 ஞாயிற்றுக்கிழமை.01.04.2018. , சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது  பாதையில் இருந்து விலகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று பெரும் அக்கினிப் பிழம்போடு அது எரிந்த வண்ணம் பூமியில் விழ உள்ளது. இதன் மொத்த எடை சுமார் 9 தொன் ஆகும். சீனாவினால் உருவாக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக இது பூமிக்கு மேல் விண் வெளியில் சஞ்சரித்து வந்தது. ஆனால் அது...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பனம் வெல்லத்திற்கு பெரும் கிராக்கி

யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பெரும் கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது எனவே பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தியை ஆரம்­பிக்­கும் நட­வ­டிக்­கையை பனை அபி­வி­ருத்தி சபை ஆரம்­பித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பனை­ ம­ரங்­க­ளில் பருவ கால கள் உற்­பத்தி ஆரம்­பிக்­கப்­பட்டுள்­ளது. மாவட்­டத்­தில் உள்ள பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச்...