siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 11 மார்ச், 2013

HIV நோய்க்கு மருந்தாகும் தேனீக்களின் ,,,



உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பாரம்பரிய மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் தேனீக்களின் நஞ்சானது HIV/AIDS உயிர்க்கொல்லி நோயினையும் குணப்படுத்தவல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சென்.லூசியசில் அமைந்துள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்களினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது HIV நோயினை பரப்பக்கூடிய அல்லது ஏற்படுத்தக்கூடிய வைரஸினை முற்றாக அழிக்கும் ஆற்றல் தேனீக்களின் நஞ்சில் காணப்படுகின்றமை குறித்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,{காணொளி, }
 

ஞாயிறு, 10 மார்ச், 2013

8 வயது சிறுவன் 61 வயது பெண்ணை மணந்த வினோத திருமணம் ,.



தென்னாப்பிரிக்காவில் 8 வயது சிறுவன் மரணப் படுக்கையில் கிடந்த தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ஹெலனை திருமணம் செய்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியுள்ளான்
 

சனி, 9 மார்ச், 2013

பிரிட்டனில் சிகரெட் பிடிப்பது குறைந்துவிட்டது


கடந்த நாற்பதாண்டுகளில் பிரிட்டனில் புகைப்பழக்கம் பாதியாகக் குறைந்துவிட்டது என்றும் குடிப்பழக்கம் கனிசமானக் குறைந்துள்ளது எனவும் பொது வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த 1947ம் ஆண்டுகளில் ஏறத்தாழ பாதிப்பேர் சிகரெட் புகைத்துள்ளனர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு ஐந்தில் ஒருவர் மட்டுமே புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
வாரத்துக்கு ஐந்து நாட்கள் மது அருந்தியவர் கடந்த 2005ம் ஆண்டு 22 சதவிகிதம் ஆக இருந்த எண்ணிக்கை கடந்த 2011ம் ஆண்டு 16 சதவிகிதம் ஆகக் குறைந்துவிட்டது.
புகைப்பதால் நுரையீரல் புற்றுநோயும், இதயநோயும் வர வாய்ப்பிருப்பதாகத் திரும்பத்திரும்ப விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
பணித்தலங்களில் புகைக்கக்கூடாது என்று பிரிட்டன் முழுக்க தடை விதிக்கப்பட்டதும், சிகரெட் விளம்பரத்துக்கு தடை விதித்ததும் புகைப்பழக்கத்தைக் குறைத்துள்ளது.
இலண்டனில் உள்ள கிங்ஸ்கல்லூரியின் பொதுசுகாதாரப் பிரிவின் கௌரவப் பேராசிரியராக இருக்கும் ஆலன் மர்யோன் டேவிஸ்(Alan Maryon-Davis) கூறுகையில், புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் குறைந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும் இன்னும் குறையவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், மதுவுக்கு விலையில் தள்ளுபடி தருவதை நிறுத்திவிடவேண்டும் ஏனென்றால் விலை குறையும்பொழுது குடிக்கும் அளவு அதிகமாகின்றது என்றும் மருத்துவமனைகளில் மதுதொடர்பான நோய்ப் பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் நுரையீரல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான டொக்டர் பென்னி உட்ஸ்(Penny Woods) கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளில் விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களும், அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், புகைப்பழக்கத்தைக் குறைத்திருப்பதால் ஆபத்தான நோய்களும் அகால மரணமும் தடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்

வெள்ளி, 8 மார்ச், 2013

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு சில???


பிரிட்டனில் வசிக்கும் ஜாக்கி ஸ்டோன் என்ற 42 வயதுப் பெண்மணி பார்வைக் குறைபாட்டுக்காக கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டார்.
பிரிட்டனிலேயே இரண்டாவது பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார். லென்ஸை அணிந்த மறுதினமே பார்வை மங்கலானதை அவர் உணர்ந்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் சென்று விடயத்தைச் சொன்னபொழுது கண்களுக்கு சொட்டு மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், எல்லை மீறிய வலியின் காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவரது கண்ணில் ஃப்யூசாரியம்(fusarium) என்னும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் அவரது இடது கண்ணில் மூன்று படலங்களையும், 70 நரம்புகளையும் அந்தப் பூஞ்சை தின்று தீர்த்திருந்தது. மருத்துவமனையில் விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை உட்பட 22 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பலன் அளிக்கவில்லை.
17 வாரங்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. இருந்தும் அவரது இடது கண் பார்வை பறிபோனது. இந்தப் பூஞ்சைத் தொற்று, பார்வை நரம்புகள் மூலம் மூளையைத் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் என்று மருத்துவர்கள் அஞ்சியதால் பாதிக்கப்பட்ட கண்ணையே அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.
பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் அவர் கண்ணில் அணிந்திருந்த காண்டாக்ட் லென்ஸ்தான் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர் அவர் தற்போது செயற்கைக் கண் பொருத்திக்கொண்டு இருக்கிறார்.
எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்
# லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.
# தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.
# கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.
# ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.
# உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.
# லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.
# எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
# புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.
புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை
# உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
# அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
# மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
# லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
# கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது

சிறப்பு மருத்துவர்களுக்குத் தடை,,,


சுவிட்சர்லாந்தில் சிறப்பு மருத்துவர்களுக்கான மூன்றாண்டுத் தடையை மாநிலங்களவை மீண்டும் உறுதி செய்துள்ளது.
சுவிஸ் செய்தி நிறுவனமான SDA மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் படையெடுத்து வருவதாக சில மாநிலங்கள் புகார் கூறுகின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட்ட சுதந்திரப் பயணத்தின் விளைவால் எல்லையோர மாநிலங்களில் மருத்துவர்களின் ஊடுருவல் அதிகமாகி விட்டதால் கடந்த 2011ம் ஆண்டு சிறப்பு மருத்துவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதன்கிழமை கூடிய தேசியக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில் 103 பேருக்கு 76 பேர் இந்த அனுமதி மறுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சிறப்பு மருத்துவர்களால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் ஃபிராங்க் கூடுதலாக காப்பீட்டுத் துறைக்குச் செலவாகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட்(Alain Berset) கூறுகையில், சிறப்பு மருத்துவர்கள் கூடுதலாக இருக்கும் மாநிலங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீண்டும் வருகின்ற ஏப்ரல் மாதம் அனுமதி மறுப்பு நடைமுறைக்குப்படுத்தப்பட்டு அத்தடை எதிர்வரும் 2016 வரை நீடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.




 

வியாழன், 7 மார்ச், 2013

அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின்


     
    உலகம் சினிமா இலங்கை விளையாட்டு தொழிநுட்பம் கவிதைகள் இந்தியா சுவிஸ் ஆங்கிலச் செய்திகள் லங்காசிறி செய்திகள் பிரித்தானியா கனடா பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி சுவிஸ் டென்மார்க் நோர்வே அமெரிக்கா அவுஸ்ரேலியா ஏனைய நாடுகள்   
   
500 ஆண்டுகளுக்கு முன்பு அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின் வாரிசுகளை திரும்பி வர அழைப்பு
ஐரோப்பிய கண்டத்தின் மத்தியத்தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டில், 15-ஆம் நூற்றாண்டில் 3 லட்சம் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். ரோமானியர்கள் ஆண்ட காலத்திலிருந்தே ஸ்பெயினில், யூதர்கள் வசித்து வந்தனர்.
 உலகில் உள்ள யூதர்களிலேயே, மிகப்பெரிய சமூகமாக விளங்கிய அவர்கள் மீது, அப்போதைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவியதால் அதற்கு பயந்து பல்லாயிரக் கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். கத்தோலிக்க மதத்திற்கு மாறத் துவங்கிய இம்மக்கள் உலகெங்கிலும் வசித்து வருகின்றனர். தற்சமயம் ஸ்பெயின் நாட்டில் யூதர்கள், 40,000-50,000 எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 500 வருடங்களுக்கு முன்பு சென்ற அவர்களின் வாரிசுகளை வரவேற்க ஸ்பெயின் அரசு கடந்த நவம்பர் மாதம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நீதித்துறை அமைச்சர் ஆல்பர்டோ ரூயிஸ் கல்லோர்டன் கூறியதாவது:-
ஸ்பெயினின் அசல் சமூகமாக வாழ்ந்த செபார்டிக் யூதர்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் வாரிசுகள், மீண்டும் திரும்பி வந்து ஸ்பெயினில் குடியேர தேவையான குடியுரிமை மற்றும் பாஸ்போர்டை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யார் ஒருவர் தன்னை ஸ்பெயினின் யூத குடி வாரிசு என்று நிரூபிக்க முடியுமானல், அவர்கள் விரைவான முறையில் பாஸ்போர்ட் பெற்று ஸ்பெயின் நாட்டு குடிமகன் ஆக முடியும். எங்களின் நீண்ட பயணத்தில் ஸ்பெயின் நாடு தன்னுடைய ஒரு பகுதியை அறிந்துகொள்ள நேரிட்டது. அதற்கான சில சந்தர்ப்பங்கள் இப்போது வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி, உலக முழுவதிலும் உள்ள செபார்டிக் யூதர்களிடையே காட்டுத் தீ போல் பரவியுள்ளது. ஸ்பெயினில் குடியேறுவது தொடர்பாக, முதல் மாதத்திலேயே பாஸ்போர்ட்டிற்கு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. இதில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவர்.




 

செவ்வாய், 5 மார்ச், 2013

உருக்கமான கடிதம் சிக்கியது ,,,,


இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவே போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமெனக் கூறி தீக்குளித்த மணி மரணமடைந்தார்.
தமிழ்நாட்டில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மணி என்பவரை தீக்காயங்களுடன் மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
உயிருக்கு போராடிய நிலையிலும் 'இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழர்களுக்காக எனது உயிரை கொடுப்பதில் பெருமை அடைகிறேன்' என அவர் தெரிவித்திருந்தார்.
அவர் உயிரிழந்த பின்பு, சம்பவ இடத்தில் அவர் முன்னர் எழுதி வைத்திருந்ததாக நம்பப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அக்கடிதத்தில், ஈழத்தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச ஒழிக என எழுதப்பட்டு பின்வருமாறு தொடர்கிறது.
வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது.
இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11ம் திகதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது மரணத்திற்கு பின்பு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.
மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும்.
மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என் நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
 

திங்கள், 4 மார்ச், 2013

நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழு தாக்கியதில் மலேசியாவில் 5 பொலிஸார்,,,


மலேசியாவின் கிழக்குப்பகுதி சாபா மாகாணம் போர்னியோ தீவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம், லஹாத் டாடு மாவட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 100 பேர் படகில் வந்து இறங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களை சூலூ ராயல் ராணுவம் என்று சொல்லிக்கொண்டு அப்பகுதி கிராமம் ஒன்றை ஆக்கிரமித்து கொண்டதோடு இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கு 19 நூற்றாண்டு பதிவேடுகளை அவர்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், நேற்று இரவு பொலிஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பொலிஸாரும், 2 ஆயுதம் ஏந்தியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 12 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும், 2 மலேசியா பொலிஸாரும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சாபா மாகாணம், 1800-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மன்னர் சூலு ஜமாலுல் கிராம் சூல்தானின் கட்டிப்பாட்டில் இருந்து, பின்னர் 1963-ம் ஆண்டு மலேசியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

ஞாயிறு, 3 மார்ச், 2013

அசையும் அசையா சொத்துக்களின் முடக்கத்தை


2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் இங்கிலாந்து மற்றும் ஜக்கிய அரபு நாடுகளில் தஞ்சமடைந்தார்.
பெனாசிர் பூட்டோ அவர்கள் 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த முஷாரப் போதிய பாதுகாப்பு அவருக்கு வழங்கத் தவறியது ஏன் என்பன தொடர்பான வழக்குகள் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தவேளை இந்த வழக்கில் விளக்கமளிக்க வேண்டிய முஷாரப் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதால் அவரை “தலைமறைவாக இருக்கும் நபர்” என அறிவித்த தீவிரவாத தடுப்பு கோர்ட் முஷராப்பின் அசையா சொத்துகள் மற்றும் வங்கிகளில் இருக்கும் ரொக்கப்பணம் ஆகியவற்றை முடக்கவும் உத்தரவிட்டது.
கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து முஷராப்பின் மனைவி சேஹ்பா முஷாரப் மனு தாக்கல் செய்தார். தான் வசிக்கும் வீடு முஷராப் தனக்கு பரிசாக வழங்கியதாகவும் வங்கிகளில் உள்ள பணம் அனைத்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது எனவும் அவ் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேஹ்பா முஷாரப் வாதங்களை மெய்ப்பிபதற்கான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர் இலியாஸ் சித்திக்கி தாக்கல் செய்யாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்ததோடு முன்னர் வெளியிட்டிருந்த ஆணை தொடர்ந்து நீடிக்குமெனவும் தெரிவித்தார்