siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 12 அக்டோபர், 2015

டென்மார் கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015


டென்மார்கில் (10/10/2015) நேற்று சனிக்கிழமை கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015 இடம்பெற்ற கவியரங்கில் மெல்ல தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்ற

அதில்இணுவை சக்திதாசன் கவிதை பாரதி இலக்கியச செல்வர் திரு. கருணானந்தராஜா (யுகசாரதி – இலண்டன்)தலைமையில் கவிஞர். பாரதிபாலன் கவிஞர் அம்பலவாணர் (ஜேர்மனி)
கவிஞர். பொன். புத்திசிகாமணி (ஜேர்மனி)அவர்களோடு இணுவை சக்திதாசன்கவியரங்கில் பங்கேற்றார்கள்,

மேற்குலகின் ஒரு நாடாம்
டென்மார்க் கரையின் சிறுதீவாம்
சேலண்டின் ஒரு நகராம் கொல்பேக் அதன் பெயராம்
வந்தேறு குடிகளாய் வந்தமர்ந்த
நம்குடிகள் பண்பாட்டைப் போற்றி
செம்பாட்டு மண் மறவா
செந்தமிழை போற்றி
ஒன்றியமாய் திசை எட்டும் கூடி
வந்தமர்ந்த பெரு விழாவில்
கவியரங்க திருவிழாவாம்
தாயே தமிழே ஊரே உறவே !
சேயாய் உந்தன் மடி மீதினிலே தவழ்ந்தேன் – எல்லை
தாண்டிய போதும் நாயாய் இருப்பேன் நின்
தமிழாய் வாழ அருள் தா! தாயே !
மெல்ல தாயை விட்டு கொல்லைப்புறமாய்
கொல்லக் கொல்ல ஓடினேன் எல்லை தாண்டி ஊரை விட்டு
சொல்லிக் கொள்ளாமல் சுந்தர தீவை விட்டு
அக்கம் பக்கம் சுற்றம் விட்டு மண்ணை கூட விட்டு
தமிழை மட்டும் காவிக் கொண்டு உயிரை கையில் கொண்டு
வானம் குடைந்து பறந்து மெல்ல மெல்ல தேடினேன் – புதிய
வானமெங்கும் தமிழை அள்ளித் தூவினேன்.
அள்ளிப் பருக ஆளில்லாட்டாலும் வெட்டவெளி எங்கும்
கொட்டிக் கிடக்கும் ஆதி மொழியாம் செந்தமிழ்
மெல்ல துளிர்த்திடும் சேதி சொல்லிப்போக வந்தேன்.
கவிக்கு ராஜா கருணைக்கும் ராஜா – இக்
கவி அரங்கிக்கும் ராஜா
தலைமைக் கவியே யுக பாரதியே
கருணானந்த ராஜாவே !
சிந்தைக்கு விருந்து தந்து சந்தங்களோடு
அரங்கில் கவிதை தந்து சென்ற
அண்டை நாட்டுடன் எம் நாட்டு கவிஞர்களே !
ரசிக்கும் பாங்குடன் கவி ருசிக்கும் சுவைஞர்களே !
வந்தனங்கள் கூறி பகருகின்றேன் எந்தன் கவிதனையே !
மெல்ல தமிழ் இனி ?
கவி எழுத கற்றுக் கொள்ள முன்னம்
காற்றள்ளி யெறிந்தது வானிலே – என்னை
புவியீர்த்ததோ புரியவில்லை
கண்டங்கள் தாண்டி விழுந்தேன் உன் முன்னே
செத்துப் போனதோ தமிலென்ரென்ன
ஏதேதோ பாசைகளில் அதட்டினான்
தமிழன்றி வேறேதும் தெரியாத என்னை
நகைத்தேன் புன்னகைத்தேன் – புது
மொழியில் கண்ணசைத்தேன் விலங்கிட்டான்
விடியும்வரை விளக்க மறியலில்
கண்ணயர முடியவில்லை என்னால்
கருவறையின் பின்னால்
நானிருந்த இருளறை முதல் சிறை
தனிமையிருளில் அடங்காத் தமிழில்
கத்தினேன் குளறினேன் – பின்
உயிலெழுதி வைத்தேன் சன்கோலமுகா சிறைக் கதவிலே
தமிலேனி சாகா தென்று திமிரிலே
விடிந்தும் விடியாப் பொழுதொன்றில்
விளக்கொளியில் தமிழ் கொண்டு வந்தானொருவன்
வணக்கமென்றபடி!
உயிர் வந்தது எனக்கும் தமிழுக்கும் !
அன்னை மண்ணை விட்டு
அகதித் தமிழனாய் விண்ணைத் தொட்டு
ஆங்காங்கே குதித்தோம்
திட்டு திட்டாய் மேற்குலக தட்டில்
இமயத்தில் இருக்கின்ற குளிர் காற்றினில் தமிழ்
இனிக்கின்ற சேதி தேன் வந்து பாயுது காதினிலே –
செந்தமிழ் நாடென்ற போதினிலே
தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி கனா
இன்று உலாப் போகுது இதயத்தை வருடி
தமிலென்பது வெறும் மொழியல்ல – அது
உன்னை சிகரத்தில் ஏற்றும் ஏணி
கவனக் குறைவால் நீ தடக்கி விழுவாயானால்
தமிழ் இனி சாகாது – கவனி
கவலைக் கிடமாவது நீதான் இது நியதி
நம்பிக்கை கொண்டு விழித்தெழு
நடுக் கடலிலும் பிழைத் திட வழியுண்டு
தும்பிக்கை தான் பலம் யானைக்கு – பிறர்
துன்பத்தை துடைத்தேழு தமிழுக்கு அழிவில்லை
கம்பன் வடித்த தமிழ் காணமல் போவதா ?
வள்ளுவன் குடித்த தமிழ் வற்றிப் போவதா ?
பாரதி கண்ட கனா மண்ணாகிப் போவதா ?
எங்கள் தமிலேனி விண்ணளா வேண்டாமா ?
விண்ணைக் குடைந்தொரு விதியொன்று செய்தோம்
முண்டங்கள் போல முடங்கா – பனி
முகட்டுக்குள் நின்றொரு
கண்டங்கள் தாவும் தமிழ் வித்தையை கண்டோம்
தளங்களில் தேர் போலொரு ரதம்
இணையத் தளங்களில் ஊருது – தமிழ்
இதயத் தளங்களிலும் ஊறுது தேன்
இமயத்தை மிஞ்சும் மொழிகளிலே – தமிழ்
இங்கிலீசை விஞ்சுது பார்
உலக மொழிகளிலே – தமிழ்
உன்னதம் கொள்ளுது பார்
எந்த மொழி அழிந்தாலும்
பத்து மொழி அழியாதாம் – அந்த பத்தில்
ஒன்று என் தமிழ்
மெல்ல தமிழ் இனி புவி மிசை யாழும்
காலத்துக்கு காலம் ஆடை மாற்றினாலும்
கலாச்சார பண்பாட்டுக்குள் வேரை மாற்றாத மொழி
பேஸ்புக் முகங்களின் முகத்தை மாற்றினாலும்
காட்சிக்கு காட்சி உரு ஏற்றும் மொழி
மெல்ல பேசும் மனசு – தமிழில்
செல்லம் பேசுது
செல்லம் பேசும் பொழுதில் – தமிழ்
வெல்லம் போலினிக்குது
மெல்ல தமிழினி உலகை
வெல்லப் போவதுறுதி
தமிழ் எனக்கு தெரியாது – அனால்
தமிழ் எனக்கு உயிர்
கவிதை எனக்கு தெரியாது – என்
உணர்வுகளை கிறுக்கி வைத்தேன் – அது
உங்கள் உள்ளங்களில் கோலம் போடுமானால்
அது போதுமெனக்கு
இணுவை சக்திதாசன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 9 அக்டோபர், 2015

புதிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்படுகிறார்

நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நேபாள பிரதமரை தேர்வு செய்யும் நடமுறைகளுக்கு அந்நாட்டு அதிபர் ராம்நரன் யாதவ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒருமித்த கருத்தில் பிரதமரை தேர்வு செய்வதற்கான காலக்கெடு 
நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெரும்பான்மை வாக்கெடுப்பு அடிப்படையில்  தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரநிதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான தகவல் ஜனாதிபதி அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று நேபாள பாராளுமன்ற சபாநாயகர் சுபாஸ் நெம்பங் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கான பெயர்களை அங்குள்ள கட்சிகள் நாளை சமர்பிக்கவுள்ளன. நேபாளத்தில் 
புதிய அரசியல் சாசனம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடந்த வாரம் பிரதமராக பதவி வகித்த சுஷில் கொய்ராலா பதவி விலகியது நினைவிருக்கலாம். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 8 அக்டோபர், 2015

வான்வழித் தாக்குதல் திருமண நிகழ்வின் போது : 13 பேர் பலி?

யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் திருமண நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, யேமன் தலைநகர் சனாவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சன்பன் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், ஹெளதி கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்கும் முயற்சியில் சவூதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா 
அரேபிய நட்பு நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் யேமனில் வான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். எனினும் இந்த தாக்குதலை சவூதி தலைமையிலான கூட்டணி மறுத்துள்ளது.
அதேவேளை, தென்-மேற்கு யேமனில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றின் போது கடந்த செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 135 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறாக ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், 
சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் தொடரும் மோதலில் 2 ஆயிரத்து 355 பொதுமக்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 3 அக்டோபர், 2015

சோதனைச்சாவடியில் தற்கொலைப்படை தாக்குதல்?

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காதிமியா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று ஈராக் போலீசார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 

இதில், பொதுமக்கள் தரப்பில் 4 பேர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 35 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 30 செப்டம்பர், 2015

அதிகரிக்கும் அகதிகள் வரவால் திணறும் ஜேர்மனி

அதிக எண்ணிக்கையில் அகதிகள் ஜேர்மனி நோக்கி வருவதால் போதுமான குடியிருப்பு வசதிகளை அகதிகளுக்கு வழங்குவதில் ஜேர்மனி அரசு திணறி வருகின்றது.
ஜேர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிப்பதன் முக்கிய காரணமாக கருதப்படுவது, படுக்கை வசதி, உணவு மற்றும் உறவிடம்.

ஆனால் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு போதிய குடியிருப்பு வசதிகளை வழங்கவே அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியின் பல பகுதிகளில் அகதிகள் நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அதுவே பொதுமக்கள் புழக்கத்திற்கு ஏற்றவகையில் இல்லை எனவும் குற்றச்சட்டுகள் எழுந்துள்ளன.

அகதிகளாக வந்துள்ள மக்களை இதுபோன்ற சூழலில் தங்க வைப்பது அவர்களின் சுகாதார நிலையை நெடுங்காலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Kassal மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அகதிகள் முகாமில் பொலிசாருக்கும் அகதிகளுக்குமிடையே நடந்த மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 1000 பேர் அனுமதிக்கப்பட வேண்டிய பகுதியில் 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை உணவுக்காகவும், குளிக்கவும், காலைக்கடன்களை முடிக்கவும் இதுபோன்ற வெகுஜன முகாம்களில் அகதிகள் பெரும்பாடு படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜேர்மனியின் 14 மாகாணங்களில் வெகுஜன குடியிருப்புக்கு தேவையான வசதிகள் எதுவும் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்,

விலங்கு பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள அளவு இருப்பிட வசதிகள் கூட அகதிகளுக்கு ஜேர்மனி அரசு வழங்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உணவகத்தில் இருமாதங்களில் இரண்டாவது தடவையும் கொள்ளை!

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பு மனிதர் எனவும் சம்பவத்தின் போது முகத்தை மறைத்து முகமூடி 
அணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த உணவகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 25 செப்டம்பர், 2015

மசூதியில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் உயிரிழப்பு

பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஏமனில் சண்டை

அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.

இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அடுத்தடுத்து தாக்குதல்

இந்த நிலையில், தலைநகர் சனாவில் போலீஸ் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ள பாலிலி மசூதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்திருந்த நபர், அவற்றை வெடிக்கச்செய்தார். குண்டுவெடித்தபோது மக்கள் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மசூதியின் நுழைவாயிலில் மற்றொருவரும் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினார். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புகளால் மசூதி பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஆங்காங்கே மனித உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.

25 பேர் உயிரிழப்பு

இந்த தாக்குதல்களில் 25 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்க வில்லை.

ஐ.எஸ். தீவிரவாதிகள்?

இருப்பினும் கடந்த சிறிது காலமாக ஏமனில் ஷியா பிரிவினரை குறிவைத்து சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். ஷியா பிரிவினரை அவர்கள் எதிரிகளாக கருதுகின்றனர். எனவே ஷியா பிரிவினர் தொழுகை நடத்த வருகிற மசூதி என்பதால், ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி இதே சனா நகரில், ஷியா பிரிவினரின் மசூதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 142 பேரை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது. 

கடந்த 6 மாதமாக சவுதியில் இருந்து வந்த அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த 22-ந் தேதி ஏடன் நகருக்கு திரும்பியுள்ள நிலையில் இப்போது சனாவில் ஷியா பிரிவினரின் மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

உயர்நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல்
 தடவையாகும்.

சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை 
மேற்கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 16 செப்டம்பர், 2015

ரயில் பேருந்துடன் மோதல் உயிர் தப்பிய சிறுவர்கள் (காணொளி இணைப்பு)

ஜேர்மனியின் Hamburg பகுதியில் பேருந்துடன் ரயில் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Hamburg நகரின் புறநகர் பகுதியான Buxtehude அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து மீது விரைவு ரயில் ஒன்று மோதிக்கொண்டது.

ரயில் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற நோக்கில் பள்ளிச் சிறுவர்களுடன் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது.

இந்நிலையில், பேருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, ரயில் வருவதையொட்டி தானியங்கி தடுப்பு அந்த பேருந்தை நகரவிடாமல் தடுத்துள்ளது
.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xyouXMsOjcw" frameborder="0" allowfullscreen></iframe>

சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்த சிறுவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

இதனிடையே ரயில் ஓட்டுநருடன் தொடர்புகொள்ள எத்தனித்த பேருந்து ஓட்டுநருக்கு ஏமாற்றமே மிஞ்சியது,

மேலும் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ரயில் மீது மோதி அதன் முன் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றது.

இதில் ரயிலுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது, மேலும் ரயில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தனர்.

சமயோசிதமாக பேருந்து ஓட்டுநர் செயல்படவில்லை எனில் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 செப்டம்பர், 2015

இந்த சிறுமி அறிவுத் திறனில்சிறந்த சாதனை.

பிரிட்டனில் மென்சா அமைப்பு அண்மையில் நடத்திய அறிவுத்திறன் தேர்வில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவி லிடியா அதிகபட்ச அளவான 162 மதிப்பெண்களை பெற்றார்.

இயற்பியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் ஆகியோர் முன்பு இத்தேர்வில் 160 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது அவர் களை விட கூடுதல் மதிப்பெண் களை லிடியா பெற்றுள்ளார்.

அறிவுக்கூர்மை உடைய வர்களை உறுப்பினர்களாக கொண்ட உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய சங்கமாக ‘மென்சா இன்டெர்நேஷனல்’ உள்ளது. உலகில் எவரும் இந்த அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று இதன் உறுப்பினராக சேரலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>