siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 2 ஜனவரி, 2014

பிற நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிறதா ஜப்பான்?

தங்கள் நாட்டு படைகள் பிற நாடுகளின் மீது படையெடுக்கு
இரண்டாம் உலகப் போரின்போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ம் படி அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைதொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், முப்படைகளும் நாட்டை பாதுகாப்பதற்கு மட்டுமே பயன்படும் என வரையறை செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே அளித்துள்ள பேட்டியில், 2020-ஆம் ஆண்டுக்குள் ஜப்பானின் அரசியல் சாசனத்தில் மாற்றம் வரலாம்.
சுய பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவம் என்ற நிலை மாறுகையில், இந்த பிராந்தியத்தில் குலைந்துள்ள அமைதியும், ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது புத்தாண்டு உரையில், நம் நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

புதன், 1 ஜனவரி, 2014

கடந்து வந்த பாதையின் சுவடுகள் (வீடியோ இணைப்பு)

டிசம்பர் 21, 2012 உலகம் அழிந்து விடும் என்ற மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்து, வெற்றிகரமாக 2013ம் ஆண்டையும் நிறைவு செய்து விட்டோம்.
இந்த ஆண்டில் ஏராளமான வளர்ச்சிகளை சந்தித்திருந்தாலும், உலகையே உலுக்கும் வண்ணம் நடந்தேறிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு
 

 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014


n2014
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014 அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன் http://lovithan.blogspot.ch/2014/01/2014.html

திங்கள், 30 டிசம்பர், 2013

கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரபூர்வமாக அனுமதி!

 அமெரிக்காவில் முதல் முறையாக கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டென்வர் உள்பட அந்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் கஞ்சா விற்பனை தொடங்கப்பட உள்ளது. கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும் விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன. இரு பிரிவுக்கும் சேர்த்து இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
   
கடந்த 2012 நவம்பரில் கொலராடோ மாகாணத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக அங்கீகரிக்க 65 சதவீத வாக்காளர்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இப்போது கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதன் விற்பனைக்கு பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 21 வயதுக்கு மேற்பட் டவர்களுக்கு மட்டுமே கஞ்சாவை

விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபருக்கு ஒரு அவுன்ஸ் (28 கிராம்) அளவுக்கு மட்டுமே வழங்க வேண்டும். கஞ்சா வாங்கும் நபர் கண்டிப்பாக தனது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
வெளி மாகாண நபர்களுக்கு 8 கிராம் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும். கடையிலோ, பொது இடத்திலோ கஞ்சாவை புகைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்

விதிக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனையின்போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் 5 நானோகிராமுக்கு மேல் கஞ்சா அளவு இருந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

  அமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்பவர்களை பாலியல் கொடுமைப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
 

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அதிகமாக சம்பாதிப்பவரா? 75 சதவீத வரி செலுத்துங்கள்

பிரான்ஸ் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறும் நபர்களிடம் 75 வீத வரியை வசூலிக்க பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது ஆண்டு வருமானத்தில் இருந்து 75 வீத வரி வசூலிக்கப்பட உள்ளது.
வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை சம்பளமாக பெறும் தனி நபர்களிடம் 75 வீதமான வரி வசூலிடும் சட்டத்தை பிரான்ஸ் அரசியலமைப்புச் சபையில் அந்நாட்டு ஜனாதிபதி பிரேன்கோசிஸ் ஹொல்லேடன் இந்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கமளிக்கப்படவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது
 

கடன் பெற்றுக் கொள்வது தொடர்பான கெடுபிடிகளில் தளர்வு


கியூபாவில் கடன் பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த கெடுபிடிகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் இலகு அடிப்படையில் கடன் பெற்றக்கெர்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகள் மற்றும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை கொள்வனவு செய்வது தொடர்பிலான சட்டத்திலும் கியூப அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கியூபாவின் மொத்த ஊழியப்படையில் பத்து வீதமானவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 28 டிசம்பர், 2013

அடுத்த 2 ஆண்டுக்கான நிதி திட்டத்தில் கையெழுத்திட்டார்


அமெரிக்காவில்  புதிய பட்ஜெட்க்கு ஒப்புதல் கிடைகாமல் கடந்த அக்டோபர் மாதம் அரசு நிறுவங்கள் முடங்கி கிடந்தனர். பலர் வேலை வாய்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இது போன்று ஒரு நிலை அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க அமெரிக்க அதிபர் ஒபாமா 2014-2015ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தில் கையொப்பம் இட்டார். இது குறித்து  அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

2014ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகார சட்ட முன்மொழிவில் ஓபாமா கையொப்பமிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு மற்றும் போர் செலவுகளுக்கு 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை இந்த 2 நிதி ஆண்டு வரவு செலவு திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஓபாமாவும், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். என்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரதமருக்கு எதிரான வன்முறையில் போலீஸ்காரர் பலி - 48 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் போலீஸ்காரர் இறந்தார். மேலும் 48 பேர் காயம் அடைந்தனர்.
பிரதமருக்கு எதிராக போராட்டம் - தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலக வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி போராட்டம் நடந்து வருகிறது.
   
அதை ஏற்க மறுத்த பிரதமர் பிப்ரவரி 2–ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இத்தேர்தலை புறக்கணிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அறிவித்தது. ஆனாலும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சியும், வேறு சில கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் தீவிரம் : இதனால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களும் கடந்த சில நாட்களாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 27 கட்சி பிரதிநிதிகள் கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய இருந்தார்கள். இதனால்

விளையாட்டு அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விளையாட்டு அரங்குக்கு காலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பூட்டிக்கிடந்த ‘கேட்’டை உடைத்து அரங்கத்துக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் இவர்களை தடுக்க முயன்றனர்.

மோதல் கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீச்சு:
இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 48 ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் நரோவ் பித்சித் (45) பரிதாபமாக செத்தார். தற்போது மீண்டும் போராட்டம், மோதல் தீவிரம் அடைந்துள்ளதால் வன்முறைவெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.அனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
   
அண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார்.இதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.தெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.